Friday, April 12, 2013

சூரிய புராணம் பகுதி-7


ஆதித்யன்(சூரியன்)  காயத்ரி மந்திரங்கள்
(கண்பார்வை மற்றும் புத்திகூர்மை பெற)
ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
பாசஹஸ்தாய தீமஹி
தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்
ஓம் பாஸ்கராய வித்மஹே
திவாகராய தீமஹி
தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்
ஓம் பாஸ்கராய வித்மஹே
மஹாஜ்யோதிஸ்சக்ராய தீமஹி
தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்
ஓம் பாஸ்கராய வித்மஹே
மஹாத்யுதிகராய தீமஹி
தன்னோ ஆதித்யஹ் ப்ரசோதயாத்
ஓம் பாஸ்கராய வித்மஹே
மஹாதேஜாய தீமஹி
தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்
ஓம் ஆதித்யாய வித்மஹே
மார்தாண்டாய தீமஹி
தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்
ஓம் லீலாலாய வித்மஹே
மஹாத்யுதிகராய தீமஹி
தன்னோ ஆதித்யாய ப்ரசோதயாத்
ஓம் பிரபாகராய வித்மஹே
மஹாத்யுதிகராய தீமஹி
தன்னோ ஆதித்யாய ப்ரசோதயாத்
ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்ரம்
அஸ்யஸ்ரீ ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்ர மஹா மந்த்ரஸ்ய
அகஸ்தயோ பகவான்ரிஷி அனுஷ்டுப் சந்த:
ஸ்ரீ சூர்ய நாராயணோ தேவதா நிரஸ்தாசேஷ விக்நதயா
ஸர்வத்ர ஜெய ஸித்யர்த்தே ஜபே விதியோக
த்யானம்
ஜயதி ஜயதி ஸுர்ய: ஸதத லோகைக தீப:
கிரணம் ருதிததாப ஸர்வது கஸ்ய ஹர்தா
அருண கிரண கம்ய்: சாதிராதித்ய மூர்த்தி
பரமபரம திவ்ய பாஸ்கரஸ்தம் நமாயி
1. ததோயுத்த பரிஸ்ராந்தம் ஸமரே சிந்தாயஸ்திதம்
ராவணம் சாக்ரதோ த்ருஷ்டவா யுத்தகாய ஸமுபஸ்திதம்
2. தைவதைஸ்ச ஸமாகம்ய த்ரஷ்டுமய்யாகதோ ரணம்
உபகம்யா பரவீதராமம் அகஸ்த்யோ பகவான் ரிஷி:
3. ராமராம மஹாபாஹோ ஸ்ருனுகுஹ்யம் ஸனாதனம்
யேந ஸர்வாநரீன் வத்ஸ ஸமரே விஜயிஷ்யஸி
4. ஆதித்ய ஹ்ருதயம் புண்யம் ஸர்வ சத்ரு விநாசனம்
ஜயாவஹம் ஜபேவ் நித்தியம் அக்ஷயம் பரமம்சிவம்
5. ஸர்வ மங்கள மாங்கல்யம் ஸர்வ பாப ப்ரணாஸனம்
சிந்தாசோக ப்ரசமனம் ஆயுர் வர்த்தன முத்தமம்
6. ரஸ்மிமந்தம் ஸமுத்யந்தம் தேவாஸுர நமஸ்க்ருதம்
பூஜயஸ்வ விஸ்வவந்தம் பாஸ்கரம் புவனேஸ்வரம்
7. ஸர்வதேவாத் மகோ ஹ்யேஷ: தேஜஸ்வீ ரஸ்மி பாவன:
ஏஷதேவா ஸுரகணான் லோகான் பாதி கபஸ்திபி:
8. ஏஷாப்ரஹ்மாச விஷ்ணுஸ்ச சிவஸ்கந்த: ப்ரஜாபதி
மஹேந்த்ரோ தனத: காலோயம: ஸோமோ ஹ்யபாம்பதி:
9. பிதரோ வஸவ: ஸாத்யா ஹயல்விநௌ மருதோமனு:
வாயுர்வஹனி: ப்ரஜா ப்ராண ருதுகர்தாப்ரபாகர
10. ஆதித்ய: ஸவிதாசூர்ய: கக: பூஸா கபஸ்திமான்
ஸ்வர்ண ஸத்ருஸோபானு: ஹிரண்யரேதா திவாகர:
11. ஹரிதஸ்வ: ஸஹஸ்ரார்சி ஸப்தஸப்திர் மரீசிமான்
திமிரோன் மதன: ஸம்புத்வஷடா மார்த்தாண்ட அம்ஸுமான்
12. ஹ்ரண்யகர்ப்ப ஸிஸிர: தபனோ பாஸ்கரோ ரவி
அக்னிகர்ப்போதிதே: புத்ர: சங்க சிஸிர நாசன:
13. வயோமநாதஸ் தமோபேதீ ருக்யஜுர் ஸாமபாரக:
கனவ்ருஷ்டி ரபாம் மித்ரோ விந்த்ய வீதிப்லவங்கம:
14. ஆதபீ மண்டலீ ம்ருத்யு: பிங்களஸ் ஸர்வதாபன:
கவிர்விஸ்வோ மஹாதேஜா: ரக்தாஸ் ஸர்வபவோத்பவ
15. நக்ஷ்த்ர க்ரஹ தாரணாம் அதிபோ விசுவபாவன:
தேஜஸாமபி தேஜஸ்வித்வாத சாத்மன் நமோஸ்துதே
16. நவ பூர்வாய க்ரயே பஸ்சிமாயாத்ரயே நம:
ஜ்யோதிர் கணானாம் பதயே திநாதிபதயே நம:
17. ஜயாய ஜயபத்ராய ஹர்யஸ்வாய நமோ நம:
நமோ நம ஸஹஸ்ராம்ஸோ ஆதித்யாய நமோ நம:
18. நம உக்ராய வீராய ஸாரங்காய நமோ நம:
நம: பத்ம ப்ரபோதாய மார்த்தாண்டாய நமோ நம:
19. ப்ரம்ஹேசா நாச்யுதேஸாய ஸுர்யாயாதித்ய வர்சஸே
பாஸ்வதே ஸர்வ புக்ஷõய ரௌத்ராய வுபுஷே நம:
20. தமோக்னாய ஹிமக்ணாய ஸ்த்ருக்னாயாமி தாத்மனே
கிருதக்ணக்னாய தேவாய ஜ்யோதிஷாம் பதயே நம:
21. தப்தசாமீ கராபாயவஹ்னயே விஸ்வகர்மனே
நமஸ் தமோபி நிக்னாய ருசயே லோகஸாக்ஷிணே
22. நாசயத்யேஷவை பூதம் ததேவ ஸ்ருஜதி ப்ரபு:
பாயத்யேஷ தபத்யேஷ வன்ஷத்யேஷ கபஸ்திபி
23. ஏஷஸுப்தேஷு ஜாகர்தி பூதேஷு பரிநிஸஷ்டித:
ஏஸ ஏவாக்னி ஹெத்ரம்ச பலம் சைவாக்ணி ஹோத்ரிணாம்
24. வேதாஸ்ச க்ரதவைஸ் சைவ க்ரதூனாம் பலமேவச
யானி க்ருத்மானி லோகேஷு ஸர்வ ஏஷ ரவி ப்ரபு:
25. ஏனமாப்தஸுக்ருச் ரேஷு காந்தாரேஷு பயஷுச
கீர்த்தயன் புருஷ கஸ்சித் நாவீவஸீததி ராகவ
26. பூஜயஸ்வைன மேகாத்ர: தேவதேனம் ஜகத்பதிம்
எதத் திரிகுணிதம் ஜபத்வா யுத்தேஷு விஜயிஷ்யஸி
27. அஸ்மின் க்ஷணே மஹாபாஹோ ராவணம் த்வம் வதிஷ்யஸி
ஏவமுக்த்வா ததாகஸ்த்யோ ஜகாமச யதாகதம்
28. எதச்ச்ருத்வா மஹாதேஜா நஷ்ட சோகோ பவத்ததா
தாராயாமாஸஸுப்ரீதோ ராகவ: ப்ரயதா த்மவான்
29. ஆதித்யம் ப்ரக்ஷ்ய ஜப்த்வாது: பரம் ஹர்ஸ மவப்தவான்
த்ரிராசம்யஸுசிர் பூத்வா தணுராதய வீர்யவான்
30. ராவணம் ப்ரேக்ஷ்ய ஹ்ருஷ்டாத்மா யுத்தாய ஸமுபாகமத்
ஸர்வயத்னேன மஹதாவதே தஸ்ய த்ருதோபவத்
அத ரவீரவதந் நிரிஷ்ய ராமம்
முதிதமனா: பரமம் ப்ரஹ்ருஹ்யமான:
நிஸிசரபதி ஸம்க்ஷயம் விதித்வா
ஸுரகணமத்யகதோ வசஸ்த்வரேதி
பானோ பாஸ்கர மார்த்தாண்ட சண்ட ரச்மே திவாகர
ஆயுராரோக்ய மைச்வர்யம் புத்ராம்ஸச தேஹிமே
ஆதித்ய ஹ்ருதயம் ஸம்பூரணம்
சூரிய பகவான் ஸ்தோத்ரம்
1. நவக்ரஹாணாம் ஸர்வேஷம் ஸூர்யாதீநாம் ப்ருதக் ப்ருதக்
பீடா சதுஸ்ஸஹா ராஜந் ஜாயதே ஸா கதம் ந்ருணாம்
2. பீடாநாஸாய ராஜேந்த்ர நாமாநி ஸ்ருணு பாஸ்வத:
ஸூர்யாதீநாம்ச ஸர்வேஷாம் பீடா நஸ்யதி ஸ்ருண்வத:
3. ஆதித்ய: ஸவிதா ஸூர்ய: பூஸார்க்க: ஸீக்ரகோ ரவி:
பகஸ் த்வஷ்டார்யமா அம்ஸோ ஹேலிஸ் தோஜோநிதிர் ஹரி:
4. திநநாதோ திநகர: ஸப்த ஸப்தி: ப்ரபாகர:
விபாவஸுர் வேதகர்த்தா வேதாங்கோ வேதவதஹந
5. ஹரிதஸ்வ: காலவக்த்ர: கர்மஸாக்ஷீ ஜகத் பதி:
பத்மிநீ போதகோ பாநுர் பாஸ்கர: கருணாகர:
6. த்வாதஸாத்மா விஸ்வகர்மா லோஹிதாங்கஸ் தமோநுத:
ஜகந்நாதோ (அ) ரவிந்தாக்ஷ: காலாத்மா கஸ்யபாத்மஜ:
7. பூதஸ்ரயோ க்ரஹபகி: ஸர்வலோக நமஸ்க்ருத:
ஜபாகுஸும ஸங்காஸோ பாஸ்வா நதிதி நந்தந:
8. த்வாந்தேபஸீம்ஹ: ஸர்வாத்மா லோகநேத்ரோ விகர்தந:
மார்த்தாண்டோ மிஹிர: ஸுரஸ் தபநோ லோக தாபந:
9. ஜகத்கர்தா ஜகத்ஸாஷீ ஸநைஸ்சரரபிதா ஜய:
ஸஹஸ்ர ரஸ்மிஸ் தரணிர் பகாவாந் பக்த வத்ஸல:
10. விவஸ்வாநாதி தேவஸ்ச தேவதேவோ திவாகர:
தந்வந்தரிர் வ்யாதிஹர்தா தத்ருகுஷ்ட விநாஸந:
11. சராசராத்மா மைத்ரேயோ மிதோ விஷ்ணுர் விகர்த ந:
லோக ஸோகாபஹர்தா ச கமலாகர ஆத்மபூ:
12. நாராயணோ மஹாதேவோ ரூத்ர: புருஷ ஈஸ்வர:
ஜீவாத்மா பரமாத்மா ச ஸூக்ஷ்மாத்மா ஸர்வதோமுக:
13. இந்த்ரோ நலோ யமைஸ்சைவ நைர்ருதோ வருணோநில:
ஸ்ரீ தரேஸோந இந்துஸ்ச பௌம: ஸெளம்யோ குரு: கவி:
14. ஸெளிர் விதுந்துத: கேது: கால: காலாத்மதோ விபு:
ஸர்வ தேவமயோ தேவ: க்ருஷ்ண: காமப்ரதாயக:
15. ய ஏதைர் நாமபிர் மர்த்யோ பக்த்யா ஸ்தௌதி திவாகரம்
ஸர்வ பாப விநிர்முக்த: ஸர்வரோக விவர்ஜித:
16. புத்ரவாந் தநவாந் ஸ்ரீமாந் ஜாயதே ஸ ந ஸம்ஸய:
ரவிவாரே படேத் யஸ்து நாமாந் யேதாநி பாஸ்வத:
17. பீடா ஸாந்திர் பவேச் தஸ்ய த்ரஹாணாம் ச விஸேஷத:
ஸத்ய: ஸுகமவாப்நோதி சாயுர் தீர்க்கம் ச நீருஜம்:
ஸ்ரீ சூரிய பகவான் கவசம் (ஸ்ரீ யாக்ஞவல்க்ய மஹரிஸி அருளியது)
1. ஸ்ருணுஷ்வ முநிஸார்துல ஸூர்யஸ்ய ஸுபம்
ஸாரீராரோக்யதம் திவ்ய ஸர்வஸெளபாக்ய தாயகம்
2. தேதீப்யமாநமுகுடம் ஸ்புரந் கமர குண்டலம்
த்யாத்வா ஸஹஸ்ரகிரணம் ஸ்தோத்ரமேத துதீரயேத்
3. ஸிரோ மே பாஸ்கர: பாது லலாடம் மேசமி தத்யுதி
நேத்ரம் திநமணி: பாது ல்ரவணே வாஸரேஸ்வர
4. க்ராணம் கர்மக்ருணி: பாது வதநம் வேதவாஹந
ஜிஹ்வாம் மே மாநத: பாதுகண்டம் மே ஸுரவந்தித:
5. ஸ்கந்தௌ ப்ரபாகர: பாதுவக்ஷ: பாது ஜநப்ரிய:
பாது பாதௌ த்வாதஸாத்மா ஸர்வாங்கம் ஸகலேஸ்வர
6. ஸூர்யரக்ஷத்மகம் ஸ்தோத்தரம் லிகித்வா பூர்ஜபத்ரகே
ததாதி ய: கரே தஸ்ய வஸகா: ஸர்வஸித்தய:
7. ஸூஸ்நாதோ யோ ஜபேத் ஸம்யக் யோசதீதே ஸ்வஸ்த மாநஸ
ஸரோகமுக்தோ தீர்க்காயு: ஸுகம் புஷ்டிம் ச விந்ததி
ரவி : சூரியன் ஸ்தோத்திரம்
க்ரஹாணா மாதி ராதித்யோ லோகரக்ஷண காரக:
விஷமஸ்தான ஸ்ம்பூதாம் பீடாம் ஸரது மே ரவி:
உலகத்தை ரக்ஷிக்கிறவரும், கிரஹங்களுக்குள் முதன்மையானவருமான சூர்யபகவான் எனது தோஷத்தை போக்க வேண்டும்.
ஸ்லோகம்
த்வி புஜம்பத்மஹஸ்தம் ச
வரதம் முகுடான் விதம்
த்யாயேத் திவாகரம் தேவம்
ஸர்வா பீஷ்ட பலப்ரதம்
(எல்லா விருப்பங்களையும் பூர்த்தி செய்பவரான சூரிய பகவானைத் தியானம் செய்தால் தகப்பனார் நலன், ஆரோக்யம், அதிகாரம், பதவி, அந்தஸ்து, பெருந்தன்மை, அரச சன்மானம் பெறலாம். ஹிருதய, ரத்தஓட்ட சம்பந்தமான நோய்கள், கண் உபத்திரவம், முதுகெலும்பில் ஊடுருவிச் செல்லும் நரம்பு பற்றிய வியாதிகம் வராமல் தடுக்கலாம்.)
சூரியன் வழிபாடு
ஜபா குஸும ஸங்காசம் காச்ய பேயம் மஹாத்யுதிம்
தமோரிம் ஸர்வ பாபக்நம் ப்ரணதோஸ்மிதிவாகரம்
சூரியன் அஷ்டோத்திரம்
ஓம் அருணாய நம
ஓம் சரண்யாய நம
ஓம் கருணாரஸ ஸிந்தவே நம
ஓம் அஸமாந பலாய நம
ஓம் ஆர்த்த ரக்ஷகாய நம
ஓம் ஆதித்யாய நம
ஓம் ஆதிபூதாய நம
ஓம் அகிலாமக வேதிநே நம
ஓம் அச்யுதாய நம
ஓம் அகிலஜ்ஞாய நம
ஓம் அநந்தாய நம
ஓம் இநாய நம
ஓம் விச்வ ரூபாய நம
ஓம் இஜ்யாய நம
ஓம் இந்த்ராய நம
ஓம் பாநவே நம
ஓம் இந்திரா மந்திராப்தாய நம
ஓம் வந்த நீயாய நம
ஓம் ஈசாய நம
ஓம் ஸுப்ர ஸந்நாய நம
ஓம் ஸுசீலாய நம
ஓம் ஸுவர்ச் சஸே நம
ஓம் வஸுப்ரதாய நம
ஓம் வஸவே நம
ஓம் வாஸுதேவாய நம
ஓம் உஜ்வலாய நம
ஓம் உக்ர ரூபாய நம
ஓம் ஊர்த் வகாய நம
ஓம் விவஸ்வதே நம
ஓம் உத்யாத் கிரண ஜாலாய நம
ஓம் ஹ்ருஷீ கேசாய நம
ஓம் ஊர்ஜஸ்வலாய நம
ஓம் வீராய நம
ஓம் நிர்ஜராய நம
ஓம் ஜயாய நம
ஓம் ஊருத்வய விநிர் முக்த நிஜ நம
ஓம் ஸாரதயே நம
ஓம் ரிஷி வந்த்யாய நம
ஓம் ருக்ஹந்த்ரே நம
ஓம் ரிக்ஷசக்ர சராய நம
ஓம் ரிஜுஸ்வபாவ வித்தாய நம
ஓம் நித்யஸ்துத்யாய நம
ஓம் ருகாரமாத்ரூகா வர்ணரூபாய நம
ஓம் உஜ்வல தேஜஸே நம
ஓம் ரிஷாதி நாத மித்ராய நம
ஓம புஷ்கராக்ஷõய நம
ஓம் லுப்த தந்தாய நம
ஓம் சாந்தாய நம
ஓம் காந்திதாய நம
ஓம் கநாய நம
ஓம் கநத்கநக பூஷணாய நம
ஓம் கத்யோ தாய நம
ஓம் லூநிதாகில தைத்யாய நம
ஓம் ஸத்யாநந்த ஸ்வரூபிணே நம
ஓம் அப வாக்கப்ரதாய நம
ஓம் ஆர்த்த சரண்யாய நம
ஓம் ஏகாகிநே நம
ஓம் பகவதே நம
ஓம் ஸ்ருஷ்டிஸ்த்தியகாரிணே நம
ஓம் குணாத்மனே நம
ஓம் க்ருணிப்ருதே நம
ஓம் ப்ருஹதே நம
ஓம் ப்ரஹ்மணே நம
ஓம் ஐச்வர்யதாய நம
ஓம் சர்வாய நம
ஓம் ஹரிதச்வாய நம
ஓம் சௌரயே நம
ஓம் தசதிக் ஸம்ப்ரகாசாய நம
ஓம் பக்த வச்யாய நம
ஓம் ஓஜஸ்கராய நம
ஓம் ஜயிநே நம
ஓம் ஜகதாநந்த ஹேதவே நம
ஓம் ஜந்ம ம்ருத்யுஜராவ்யாதி வர்ஜிதாய நம
ஓம் ஒளந்நத்ய பதஸஞ்சார ரதஸ்த்தாய நம
ஓம் அஸுராரயே நம
ஓம் கம்நீய கராய நம
ஓம் அப்ஜ வல்லபாய நம
ஓம் அந்தர் பஹி: ப்ரகர்சாய நம
ஓம் அசிந்த்யாய நம
ஓம் ஆத்ம ரூபிணே நம
ஓம் அச்யுதாய நம
ஓம் அமரேசாய நம
ஓம் பரஸ்மை ஜ்யோதிஷே நம
ஓம் அஹஸ்கராய நம
ஓம் ரவயே நம
ஓம் ஹரயே நம
ஓம் பரமாத்மநே நம
ஓம் தருணாய நம
ஓம் வரேண்யாய நம
ஓம் க்ரஹாணாம் பதயே நம
ஓம் பாஸ்கராய நம
ஓம் ஆதி மத்யாந்த ரஹிதாய நம
ஓம் ஸெளக்ய ப்ரதாய நம
ஓம் ஸகல ஜகதாம் பதயே நம
ஓம் ஸூர்யாய நம
ஓம் கவயே நம
ஓம் நாராயணாய நம
ஓம் பரேசாய நம
ஓம் தேஜோ ரூபாய நம
ஓம் ஸ்ரீம் ஹ்ரண்ய கர்ப்பாய நம
ஓம் ஹரீம் ஸம்பத் கராய நம
ஓம் ஐம் இஷ்டார்த்ததாய நம
ஓம் அம் ஸுப்ர ஸந்நாய நம
ஓம் ஸ்ரீ மதே நம
ஓம் ச்ரேயஸே நம
ஓம் ஸெக்ய தாயிநே நம
ஓம் தீப்த மூர்த்தயே நம
ஓம் நிகிலாகம வேத்யாய நம
ஓம் நித்யா நந்தாய நம
நாநாவித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி
நவக்கிரக மங்கள ஸ்தோத்ரம்
சூரியன் மங்களாஷ்டகம்
பாஸ்வாநர்க ஸமிச்ச ரக்தகிரண: ஸிம்ஹாதிப: காச்யபோ
குர்விந்த்வோச்ச குஜஸ்ய மித்ரமரிக் த்ரிஸ்த்த: சுப: ப்õரங்முக:
சத்ருர் பார்க்கவ ஸெளரயோ: ப்ரியகுட: காலிங்க தேசாதிபோ
மத்யே வர்த்துலமண்டலே ஸ்திதிமித: குர்யாத் ஸதா மங்களம்
பொருள்: எருக்கு சமித்தில் ஆசையுள்ளவர். சிவந்த கிரணமுள்ளவர். ஸிம்மாதிபதி காச்யப கோத்ரம், நவக்கிரக மண்டலத்தில் நடுநாயகமாக விளங்கும் சூரியபகவான் சதா மங்க ளத்தை செய்யட்டும்.
ஞாயிற்றுக் கிழமைகளில் இந்த ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்தால் சூரிய பகவானின் பரிபூரண அருள் கிடைக்கும்.
சந்திரன் மங்களாஷ்டகம்
சந்த்ர: கர்கடகப்ரபு: ஸிதருசிச் சாத்ரயே கோத்ரோத்பவச்
சாக்நேயே சதுரச்ர (கோஅ) பரமுகோ கௌர்யர்ச்சயா தர்பித:
ஷட்ஸப்தாக்நிதசா த்யசோபநபலோ சத்ருர் புதார்க்க ப்ரிய:
ஸெளம்யோ யாமுநதேசபர்ணஜஸமித் குர்யாத் ஸதா மங்களம்
பொருள்: கர்கடக அதிபதியும் ஆத்ரேய கோத்திரத்தில் பிறந்தவரும், பலா சமித்தில் பிரியமுள்ளவரும், ஆக்னேய திக்கில் சதுரஸ்ரமான மண்டலத்தில் இருப்பவருமான சந்திரன் நமக்கு மங் களத்தை தரட்டும். திங்கள் கிழமைகளில் இந்த ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்தால் சந்திர பகவானின் பரிபூரண அருள் கிடைக்கும்.
செவ்வாய் மங்களாஷ்டகம்
பௌமோ தக்ஷிணதிக்த்ரிகோண நிலயோ (அ)வந்தீபதி: காதிர
ப்ரீதோ வ்ருச்சிகமேஷயோ ரதிபதிர் குர்வர்க்க சந்த்ரப்ரிய:
ஜ்ஞாரி: ஷட்த்ரிசுப ப்தரச்ச வஸூதாதாதா குஹாதீச்வரோ
பாரத்வாஜ குலோத்பவோ (அ)ருணசி: குர்யாத் ஸதா மங்களம்
பொருள்: கருங்காலி ஸமித்தில் பிரியமுள்ளவரும், விருச்சிக மேஷங் களுக்கு தலைவரும், பாரத்வாஜ கோத்ரமுள்ளவரும், தெற்கு திசையில் திரிகோண மண்டலத்தில் இருப்பவருமான அங்காரகன் (செவ்வாய்) நமக்கு மங்களத்தைச் செய்யட்டும்.
செவ்வாய் கிழமைகளில் இந்த ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்தால் அங்காரக பகவானின் பரிபூரண அருள் கிடைக்கும்.
புதன் மங்களாஷ்டகம்
ஸெளம்ய: பீத உதங்முகஸ்ஸமிதபாமார்கோ (அ)த்ரிகோத்ரோத்பவோ
பாணோசாநகத: ஸூஹ்ருத் ரவிஸூதோ வைரீக்ருதாநுஷ்ணருக்
கந்யாயுக்மபதிர் தசாஷ்டம சதுஷ் ஷண்ணேத்ரக: சோபநோ
விஷ்ண்வாராதந தர்ப்பிதோ மகதப: குர்யாத் ஸதாமங்களம்
பொருள்: நாயுருவி ஸமித்தில் பிரியமுள்ளவரும், அத்ரிகோத்ரியும், கன்னி, மிதுனங்களின் தலைவரும், வடக்கு திசையில் பாணவடிவமான மண்டலத்தில் வீற்றிருப்பவருமான புதன் மங்களத்தை தரட்டும். புதன் கிழமைகளில் இந்த ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்தால் புத பகவானின் பரிபூரண அருள் கிடைக்கும்.
குரு (வியாழன்) மங்களாஷ்டகம்
ஜீவச்சோத்தர திங்முகோத்தரககுப் ஜாதோங்கிரோ கோத்ரத:
பீதோசவத்த ஸமிச்ச ஸிந்த்வதிபதி: சாபர்க்ஷமீநாதிப:
ஸூர்யேந்து க்ஷிதிஜப்ரிய: ஸிதபுதாராதி: ஸமோ பாநுஜே
ஸப்தாபத்ய தபோர்த்தக: சுபகர: குர்யாத் ஸதா மங்களம்
பொருள்: ஆங்கிரச கோத்ரியும், அரச சமித்தில் விருப்பமுள்ளவரும், தனுசு, மீனங்களின் தலைவரும், வடக்கு முகமாக சதுரபீட மண்டலத்தில் வீற்றிருப்பவருமான குரு மங்களத்தைச் செய்யட்டும்.
வியாழக் கிழமைகளில் இந்த ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்தால் குரு பகவானின் பரிபூரண அருள் கிடைக்கும்.
சுக்கிரன் (வெள்ளி)  மங்களாஷ்டகம்
சுக்ரோ பார்க்கவ கோத்ரஜஸ் ஸிதருசி: பூர்வாநந: பூர்வதிக்
காம்போஜாதிபதிஸ் துலாவ்ருஷபகச் சௌதும்பரைஸ் தர்பித:
ஸெளம்யர்க்யோஸ்ஸூஹ்ரு தம்பிகாஸ்துதுதிவசாத் ப்ரீதோர்க்க சந்த்ராஹிதோ
நாரீபோககர: சுபோ ப்ருகுஸூத: குர்யாத் ஸதாமங்களம்
பொருள்: பார்க்கவ கோத்ரியும், விருஷ, துலாம் தலைவரும், அத்தி சமித்தில் பிரியமானவரும், கிழக்கே கிழக்குமுகமாக ஐந்து கோண வடிவமான மண்டலத் தில் இருப்பவரும், ஸ்தீரி போகத்தை தருபவருமான சுக்கிரன் மங்களத்தைச் செய்யட்டும்.
வெள்ளிக் கிழமைகளில் இந்த ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்தால் சுக்ர பகவானின் பரிபூரண அருள் கிடைக்கும்.
கேது மங்களாஷ்டகம்
கேதுர் ஜைமிநிகோத்ரஜ: குசஸமித் வாயவ்யகோணே ஸ்த்தித:
சித்ராங்கத்வஜ லாஞ்ச்சநோ ஹி பகவாந் யாம்யாயநந: சோபந:
ஸந்துஷ்டோ கணநாத பூஜநவசாத் கங்காதி தீர்த்தப்ரத:
ஷட்த்ரிஸ்த்த: சுபக்ருச்ச சித்ரிததநு: குர்யாத் ஸதா மங்களம்.
பொருள்: ஜைமினி கோத்திரதாரரும், தர்ப்பையில் பிரியமுள்ளவரும், வாயுமூலையில் மேற்குமுகமாக வீற்றிருப்பவரும், கங்கா யாத்திரையை அளிப்பவருமான கேது மங்களத்தைச் செய்யட்டும்.
ஞாயிற்றுக் கிழமைகளில் இந்த ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்தால் கேது பகவானின் பரிபூரண அருள் கிடைக்கும்.
ராகு மங்களாஷ்டகம்
ராஹூர்பர்பரதேசபோ நிருருதௌ க்ருஷ்ணாங்க குர்பாஸநோ
யாம்யாசாபிமுகச்ச சந்த்ரரவிருத் பைடீநஸி: க்ரௌர்யவாந்
ஷட்த்ரிஸ்த்த: சுபக்ருத் கராலவதந: ப்ரீதச்ச தூர்வாஹூதௌ
துர்க்கா பூஜநத: ப்ரஸந்த ஹ்ருதய: குர்யாத் ஸதா மங்களம்
பொருள்: பைடீனஸி கோத்ரத்தைச் சேர்ந்தவரும், துவரை சமித்தில் விருப்பமுள்ளவரும், தெற்கே தெற்குமுகமாக முறம் போன்ற மண்டலத்தில் உள்ளவருமான ராகு நமக்கு மங்களத்தைச் செய்யட்டும்.
ஞாயிற்றுக் கிழமைகளில் இந்த ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்தால் ராகு பகவானின் பரிபூரண அருள் கிடைக்கும்.
கேது மங்களாஷ்டகம்
கேதுர் ஜைமிநிகோத்ரஜ: குசஸமித் வாயவ்யகோணே ஸ்த்தித:
சித்ராங்கத்வஜ லாஞ்ச்சநோ ஹி பகவாந் யாம்யாயநந: சோபந:
ஸந்துஷ்டோ கணநாத பூஜநவசாத் கங்காதி தீர்த்தப்ரத:
ஷட்த்ரிஸ்த்த: சுபக்ருச்ச சித்ரிததநு: குர்யாத் ஸதா மங்களம்.
பொருள்: ஜைமினி கோத்திரதாரரும், தர்ப்பையில் பிரியமுள்ளவரும், வாயுமூலையில் மேற்குமுகமாக வீற்றிருப்பவரும், கங்கா யாத்திரையை அளிப்பவருமான கேது மங்களத்தைச் செய்யட்டும். ஞாயிற்றுக் கிழமைகளில் இந்த ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்தால் கேது பகவானின் பரிபூரண அருள் கிடைக்கும்.

சூரிய புராணம் பகுதி-6


சூரிய நமஸ்காரப் பதிகம்வெண்பா: மின்னுஞ் சூரியன் மீது மேவச் சிறு பதிகம், பன்னும் படி யெனக்குப் பாலிப்பாய்-துன்னக், கடவாரணனே காண்பரிய காரணனே, யிடமாகு முன் மறைத்தாள்.
ஆசிரிய விருத்தம்
வீதிவெளி யாகாச மீதிற் பிரகாசமாய்
மெய்ஞ்ஞான தீபச் சுடராய்
வெளியாகி ஒளியாகி விந்துசுழி முனைமீதில்
விளையாடும் ஓங்காரமாய்
ஓதுமுதலைந்தெழுந்து பதேச மந்திரம்
உரைக்கின்ற சற்குருவுமாய்
உருவாகி உயிராகி உயிருக்குள் அறிவாகி
ஊடாடி நின்ற உணர்வாய்
ஆதிமுத லானவளரன் டபகி ரண்டங்கள்
ஆயிரத் தெட்டுமாகி
அறுநூற்றிருபத்து நாலு புவனங்களும்
ஆண்ட மயமான நிறமாம்
சோதிமய மானபரி பூரணவிலாசமிகு
சூட்சும ரதமே றியே
துலங்குகதிர் மதியென விளங்கு சிவசங்கர
சூரி நாராயண சுவாமியே !
இன்ப சுகமாகவும் பூமியாகாசமும்
ஏகாந்த வைபோகமும்
ஈரேழு பதினான்கு லோகங்களத்தனையும்
இரட்சிக்கும் ஈச்வரனுமாய்
அம்பரதி கம்பர பரம்பர வநாகத
அநாதி யொளியான வெளியாய்
ஆனந்த நடன மிடு முத்தண்டமாகவே
யாடிய சபாபதியுமாய்
வம்பரோடு காலன் எமதூதரணு காமலே
வந்தருள் புரிந்து நிதமும்
வளர்கின்ற கைலாச பரமபத கொடி முடியின்
வரையினை வணங்கி முடிவார்
துன்பமெனு நரகவழி வீழாமல் ரட்சியுஞ்
சோதி ரத மீதேறிய
துலங்கு கதிர்மதியென விளங்கு சிவசங்கர
சூரிய நாராயண சுவாமியே.
உத்ரமிகும் அக்கினி சொரூப வடிவாகிய
ஓங்கார ரூபமாகி
ஒளியாகி வெளியாகி உதயகிரி மீதினில்
உதிக்கின்ற தெய்வமாகிச்
சகல புவனங்களும் தானாகி நின்றவொரு
சச்சிதானந்த மயமாய்ச்
சாலோக சாமீப சாரூப சாயுஜ்ய
சகல சூட்சும தாரியாய்
விக்கிர சிவலிங்க வடிவாக வுமிகுந்த சதுர்
வேதாந்த முத்தி முதலாய்
வெகுகோடி காலங்கள் உன்னையே நம்பினேன்
வேதனே பர நாதனே
சுக்ரகெம் பீரபரி பூரண விலாசனே
சுயம்புரத மீதேறியே
துலங்குகதிர் மதியென விளங்கு சிவசங்கர
சூரி நாராயண சுவாமியே !
சாஸ்திர புராண முதல் வேத வேதாந்தமிகு
சர்வத் தபோதனர்களுஞ்
சகலமான தேவருஞ் சகலமான முனிவர்களுஞ்
சகல சீவன்களுடனே
நேத்திரமதாகவே குறியாகி நெறியாக
நிருமல சொரூபமாகி
நிகழும் சிருஷ்டி திதி சம்மாரவதிகார
நின்ற திரி மூர்த்தியாகி
காத்திரமதாய ஐந்து பஞ்சபூதங்களும்
கருணா கடாட்ச முடனே
கண்டு களிகூர்ந்திடும் விண்ட பரிபூரண
கலைக்கியான வேதமுதலே
சூத்திரந் தாவி விளையாடு மானந்தச்
சுயம்பு ரத மீதேறியே
துலங்குகதிர் மதியென விளங்கு சிவசங்கர
சூரிய நாராயண சுவாமியே.
நிறையான சுக்கிலஞ் சுரோணிதக் கருவூரி
னின்று மொன்றாகவேதான்
நிலையான முக்கோண சக்கரந் தன்னிலே
நிதாகார கமலமீதில்
விரைவான நிலைவீடு மறுகோண மாகியும்
ஆங்கார ஓங்காரமாய்
ஆடிவிளை யாடி நட மாடிய பராபர
அச்சு தானந்த மெனவே
குறையான அன்னையின் கர்ப்பமதில் வாசமுங்
குடியாக முந்நூறு நாட்
கொண்ட ஓர் தாவதனை விண்டுபின் பூமியிற்
குழந்தையாய் வந்து வளரும்
துறையான பாதவழி வீழாமலே செய்ய
சொர்ணரத மீதேறியே
துலங்கு கதிர் மதியென விளங்கு சிவசங்கர
சூரிய நாராயண சுவாமியே.
ரத்தமொடு மாமிசமு மத்தியோடு ரோமமும்
நரம்பு தோலெலும்பு மயிரும்
நாடியொடு சிலேத்துமமும் வாத பித்தங்களும்
நாரும் சீதச வாயுவுடன்
சுத்த பரிசுத்தமொடு ரூபரச கெந்தமமுஞ்
சுக்லாதிதப் பொருளுமாய்ச்
சரணார விந்தமிகு கண்களிரு வகையுமாய்
சார்வையிரு நா பியுடனே
உற்ற கமலந்தனி லுற்ற வுயிரறவே
ஊடாடி நின்ற வுணர்வாய்
ஓங்கார ரீங்கார வாங்கார ரூபமா
யோரெழுத் தாகவே தான்
சுத்த கெம்பீர பரிபூரண விலாசமிகு
சூட்சும ரத மீதேறியே
துலங்கு கதிர் மதியென விளங்கு சிவசங்கர
சூரிய நாராயண சுவாமியே.
நிலையில்லாச் சமுசார வாழ்வை நிஜமென்றெண்ணி
நினைவு தடுமாறாமலும்
நிஜரூபமாகவேகாட்சி தந் தெனையாண்டு
நியமிக்க விது சமயமே
அலையாம லீரேழு பதினான்கு லோகமும்
அணுவுக்கு ளணுவாகியே
அரியர பிரம்மாதி யவதார சிங்கார
அகோர அக்கினி ரூபமாய்
மலையாள கைலாச கிரிகளோடு பரமபதம்
மகமேரு வைகுந்தமும்
வாசமிகு வானதொரு வீதி யாகாயமதில்
வளரும் பிரகாசவொளியே
தொலையாத சளனமதில் முன்செய்த தீவினைத்
துயர்தீர ரத மேறியே
துலங்கு கதிர் மதியென விளங்கு சிவசங்கர
சூரிய நாராயண சுவாமியே.
வழியென்ற துறைகணிலைகள றியாமலே
மனது மிகவே கலங்கி
மாதர்தம் சுகமான வாசைதனை நிசமென்று
மண்ணுலகிலேயலைந்து
பழியென்ற தீவினை யகற்றி விடுமுன் பாதம்
பணியவே யருளுமில்லான்
பாழுமென் மனங்குவிய ஓன்று தரிதம்பனம்
பண்ணுவ துனக்கருமையோ
விதி என்ற கண்ணொளியாகவே நின்றுவிளை
யாடுமணி ரூபமாகி
மேலான செல்வமது தந்தருள் புரிந்திடும்
வேத வேதாந்த முதலே
சுழியென்ற முனை மீதில் ஒங்காரமான அதி
சூட்சுமரத மீதேறியே
துலங்கு கதிர் மதியென விளங்கு சிவசங்கர
சூரிய நாராயண சுவாமியே.
அட்ட திசையெட்டுடன் பதினாறுகோணமும்
அகண்டதொரு கால மீதில்
ஆகாசமீதில் வெகு சோதிப் பிரகாசமாய்
அலங்கார தீபசுடரே
கட்டமதுவான தொரு கவலையினிதீரவுன்
கருணா கடாட்சமுடனே
கனயோக ஞானமது சேவடி கடந்து நீர்
காத்து ரட்சித் தருளவே
இட்டகுல தெய்வம் நீர் எந்தனது உள்ளத்து
இருந்து விளையாடுமவனீ
இன்ப சுகபோகமுஞ் சம்போகமும்
ஏகாந்த வைபோகமு நீ
துட்ட கதி காலமது வென்னை வந்தணுகாது
துணையாக ரத மேறியே
துலங்கு கதிர்மதியென விளங்கு சிவசங்கர
சூரிய நாராயண சுவாமியே.
தங்கமுங்கனக கோபுர விமானமுஞ்
சதுர்வேத மேற் கலசமுத
தளதளென மின்ன வொளியான நவரத்னந்
தரித்த மதி வரிகம்பமும்
அங்கமுறுதாக்கலுறு மனவேகமுங் குதிரை
யாங்கார வோங்காரமா
யைந்தெழுத்தாய் நின்ற மந்த்ர சொரூபமதில்
அருணனே சாரதியுமாய்ச்
சங்கமு மென்னுள்ளே வண்டில் கட்டாணியை
தியானமதனா லிருக்குந்
தினந்தினமு மெந்தனிட சிந்தையி லிருந்தருள
திகம்பரமுமான பொருளே
துங்கபரி பூரண விலாச வொளியாகவே
சுயம்பு ரதமீமேறியே
துலங்கு கதிர் மதியென விளங்கு சிவசங்கர
சூரிய நாராயண சுவாமியே.
நவக்கிரக ஸ்தோத்திரம்
காப்பு-வெண்பா
மண்ணுளுயிர்கட்கனைத்து மாறாதளித்து நல
நண்ணு நவக்ரக நண்பு சொல தண்ணுலவு
திங்களணி தங்குமுயர் செஞ்சடையருண் மகிழ்செய்
கங்கையரு ளைங்கரனார் காப்பு.
சூரியன்
காசினி இருளை நீக்கும் கதிரொளி யாகி எங்கும்
பூசுர உலகோர் போற்றப் பொசிப்புடன் சுகத்தை நல்கும்
வாசியே ழுடைய தேர்மேல் மகாகிரி வலமாய் வந்த
தேசிகா எனைரட் சிப்பாய் செங்கதி ரவனே போற்றி.
சந்திரன்
அலைகடல் அமுதங் தன்னோ டன்றுவந் துதித்து மிக்க
கலைவளர் திங்க ளாகிக் கடவுளோர்க்கு அமுதம் ஈயும்
சிலைநுதல் உமையாள் பாகன் செஞ்சடைப் பிறையாய் மேரு
மலைவல மாக வந்த மதியமே போற்றி போற்றி.
செவ்வாய்
வசனம்நல் தைரி யந்தான் மன்னவர் சபையில் வார்த்தை
புசபல பராக்ர மங்கள் போர்தனில் வெற்றி ஆண்மை
நிசமுடன் அவர வர்க்கு நீள்நிலம் தன்னில் நல்கும்
குசன்நில மகனாம் செவ்வாய் குரைகழல் போற்றி போற்றி.
புதன்
மதனநூல் முதலா உள்ள மறைகளும் கல்வி ஞானம்
விதமுடன் அவர வர்க்கு விஞ்சைகள் அருள்வோன் திங்கள்
சுதன்பவிசு பாக்கி யங்கள் சுகம்பல கொடுக்க வல்லான்
புதன்கவிப் புலவன் சீர்சால் பூங்கழல் போற்றி போற்றி.
பிரகஸ்பதி
மறைமிகு கலைநூல் வல்லோன் வானவர்க் கரசன் மந்திரி
நறைசொரி கற்ப கப்பொன் நாட்டினுக் கதிபனாக்கி
நிறைதனம் சிவிகை மன்றல நீடுபோ கத்தை நல்கும்
இறையவன் குருவி யாழன் இணையடி போற்றி போற்றி.
சுக்கிரன்
மூர்க்காவன் சூரன் வாணன் முதலினோர் குருவாய் வையம்
காக்கவான் மழைபெய் விக்கும் கவிமான் கனகம் ஈவோன்
தீர்க்கவா னவர்கள் போற்றச் செத்தவர் தமை எழுப்பும்
பார்க்கவன் சுக்ராச் சாரி பாதபங் கயமே போற்றி.
சனி
முனிவர்கள் தேவர் ஏனை மூர்த்திகள் முதலானோர்கள்
மனிதர்கள் சகல வாழ்வுன் மகிமை அல்லால்வே றுண்டோ
கனிவுள தெய்வம் நீயே கதிர்சேயே காகம் ஏறும்
சனிபக வானே போற்றி தமியனேற் கருள்செய் வாயே.
ராகு
வாகுசேர் நெடுமால் முன்னம் வானவர்க் கமுதம் ஈய
ஏகிநீ நடுவி ருக்க எழில்சிரம் அற்றுப் பின்னர்
நாகத்தின் உடலோ டுன்றன் நற்சிரம் வாய்க்கப் பெற்ற
ராகுவே போற்றி போற்றி ரட்சிப்பாய் ரட்சிப் பாயே.
கேது
மாதுரு நெடுமால் முன்னம் வானவர்க் கமுதம் ஈயும்
போது நீ நடுவிருக்கப் புகழ்சிரம் அற்றுப் பின்னர்
ஓதுறும் அரச நாகத் துயர்சிரம் ஐந்து பெற்ற
கேதுவே போற்றி போற்றி கீர்த்தியாய் ரட்சிப் பாயே.
பொது
சூரியன் சோமன் செவ்வாய்
சொற்புதன் வியாழம் வெள்ளி
காரிய மிராகு கேது
கடவுள ரொன்பானாமத்
காரியல் சக்கரத்தைத்
தரித்திரர் பூசித்தாலும்
பாரினிற் புத்திரருண்டாம்
பாக்கியம் நல்குந்தானே.
சூரியன்  போற்றி
ஓம் அதிதி புத்ரனே போற்றி
ஓம் அளத்தற்கரியனே போற்றி
ஓம் அறுகுப்பிரியனே போற்றி
ஓம் அருணன் சோதரனே போற்றி
ஓம் அகந்தை அழிப்பவனே போற்றி
ஓம் அக்கினி அதிதேவதையனே போற்றி
ஓம் ஆண் கிரகமே போற்றி
ஓம் ஆதிவார நாதனே போற்றி
ஓம் ஆய்வின் இலக்கே போற்றி
ஓம் ஆறாண்டாள்பவனே போற்றி
ஓம் ஆன்மாவே போற்றி
ஓம் ஆதித்யஹ்ருதய ப்ரியனே போற்றி
ஓம் இருள்நீக்கியே போற்றி
ஓம் இயக்க சக்தியே போற்றி
ஓம் ஈசன் வலக்கண்ணே போற்றி
ஓம் உக்கிரனே போற்றி
ஓம் உஷா நாதனே போற்றி
ஓம் உவமைப் பொருளே போற்றி
ஓம் உயிர்களின் வாழ்வே போற்றி
ஓம் உத்திர நாதனே போற்றி
ஓம் உத்திரட்டாதிபதியே போற்றி
ஓம் என்பானவனே போற்றி
ஓம் எருக்கு சமித்தனே போற்றி
ஓம் எழுபரித் தேரனே போற்றி
ஓம் எண்ணெழுத்து மந்திரனே போற்றி
ஓம் எங்கும் நிறைந்தவனே போற்றி
ஓம் ஏற்றமளிப்பவனே போற்றி
ஓம் ஒளிப்பிழம்பே போற்றி
ஓம் ஓராழித்தேரனே போற்றி
ஓம் ஓய்விலானே போற்றி
ஓம் ஓங்காரத் துதித்தவனே போற்றி
ஓம் கதிரவனே போற்றி
ஓம் கண்கண்ட தெய்வமே போற்றி
ஓம் களங்கமிலானே போற்றி
ஓம் கமலம் விரிப்பவனே போற்றி
ஓம் கர்ணன் தந்தையே போற்றி
ஓம் கனலே போற்றி
ஓம் கண்ணில் காவலே போற்றி
ஓம் கற்பரசிச் சேவகனே போற்றி
ஓம் கண்டியூரில் அருள்பவனே போற்றி
ஓம் காசியபர் மைந்தனே போற்றி
ஓம் காயத்ரி தேவனே போற்றி
ஓம் கார்ப்புச் சுவையனே போற்றி
ஓம் காலக் கணக்கே போற்றி
ஓம் காய்பவனே போற்றி
ஓம் காலைமாலைக் கனிவோனே போற்றி
ஓம் கிழக்கு நோக்கனே போற்றி
ஓம் கிருத்திகை அதிபதியே போற்றி
ஓம் கிரக நாயகனே போற்றி
ஓம் கிருபாகரனே போற்றி
ஓம் குந்திக்கருளியவனே போற்றி
ஓம் குறை தீர்ப்பவனே போற்றி
ஓம் கோதுமைப் பிரியனே போற்றி
ஓம் கோணார்க்கிலருள்பவனே போற்றி
ஓம் ஞாயிறே போற்றி
ஓம் ஞாலக் காவலே போற்றி
ஓம் சனித் தந்தையே போற்றி
ஓம் சங்கராந்தி நாயகனே போற்றி
ஓம் சாட்சித் தேவனே போற்றி
ஓம் சமரிலானே போற்றி
ஓம் சிங்கக் கொடியனே போற்றி
ஓம் சிம்மராசியதிபதியே போற்றி
ஓம் சிரஞ்சீவியே போற்றி
ஓம் சிதம்பரத்தாலயமுளானே போற்றி
ஓம் சுயம்பிரகாசனே போற்றி
ஓம் சூர்ய நமஸ்காரப் பிரியனே போற்றி
ஓம் சூரியனார் ஆலயத் தேவனே போற்றி
ஓம் செம்மேனியனே போற்றி
ஓம் செம்மலர்ப்பிரியனே போற்றி
ஓம் செந்நிறக் குடையனே போற்றி
ஓம் செந்தாமரை ஏந்தியவனே போற்றி
ஓம் சூலாயுதனே போற்றி
ஓம் சோழர் மூதாதையே போற்றி
ஓம் சௌரத் தலைவனே போற்றி
ஓம் தனிக்கோயிலுளானே போற்றி
ஓம் தாமிர உலோகனே போற்றி
ஓம் தூயவனே போற்றி
ஓம் திருமேய்ச்சூரில் அருள்பவனே போற்றி
ஓம் நடுவிருப்போனே போற்றி
ஓம் நன்னிலத்தருள்பவனே போற்றி
ஓம் நலமேயளிப்பவனே போற்றி
ஓம் நளாயினிக்கருளியவனே போற்றி
ஓம் நான்முனித் தந்தையே போற்றி
ஓம் நாடப்படுபவனே போற்றி
ஓம் நீதித் தேவனே போற்றி
ஓம் நோய் தீர்ப்பவனே போற்றி
ஓம் பகற் காரணனே போற்றி
ஓம் பனையபுரத் தருள்பவனே போற்றி
ஓம் பரஞ்சோதியே போற்றி
ஓம் பரிட்சுத்துக்கருளியவனே போற்றி
ஓம் பாலைநிலத் தேவனே போற்றி
ஓம் பிரபாகரனே போற்றி
ஓம் புகழ் வாய்த்தவனே போற்றி
ஓம் புத்தியளிப்பவனே போற்றி
ஓம் மல நாசகனே போற்றி
ஓம் மதி ஒளிரச் செய்பவனே போற்றி
ஓம் மயில் வாகனனே போற்றி
ஓம் மயூரகவிக்கருளியவனே போற்றி
ஓம் முதல் கிரகமே போற்றி
ஓம் முக்கோணக் கோலனே போற்றி
ஓம் முழுமுதற் பொருளே போற்றி
ஓம் மும்மூர்த்தி அம்சமே போற்றி
ஓம் ரவிகுலத் தலைவனே போற்றி
ஓம் ருத்ரன் ப்ரத்யதிதேவதையனே போற்றி
ஓம் விடியச் செய்பவனே போற்றி
ஓம் வலிவலத்தருள்பவனே போற்றி
ஓம் ஹ்ரீம் பீஜ மந்திரனே போற்றி
ஓம் சூரியநாராயணனே போற்றி
ஓம் சூர்யதேவாய நம!
சூரியோதயம் (வீரசோழியம்)
வேலை மடற்றாழை வெண்டோட்டிடைக்கிடந்து
மாலைத் துயின்ற மணிவண்டு  காலைத்
துளிநறவந் தாதெதிரத் தோன்றிற்றே காமர்த்
தெளிநிற வெங்கதிரோன் தேர்.      
(வேறு)
இரவிடை மதியம் என்பான்
நாடிப்போய் மறையும் எல்லை
விரியிருள் எழினி நீக்கி
விசும்பெனும் அரங்கு தன்மேல்
கரைகடல் முழவம் ஆர்ப்பக்
கதிரெனும் கைகள் வட்டித்து
எரிகதிர் என்னும் கூத்தன்
ஆடுவான் எழுந்து போந்தான்.
சூரிய பகவான்
(தண்டியலங்காரம்)
முன்னங் குடைபோல் முடிநாயக மணிபோல்
மன்னுந் திலகம்போல் வாளிரவி  பொன்னகலந்
தங்குங் கவுத்துவம்போ லுந்தித் தடமலர்போல்
அங்கணு லகளந்தார்க் காம்.

சூரிய புராணம் பகுதி-6


சூரிய நமஸ்காரப் பதிகம்வெண்பா: மின்னுஞ் சூரியன் மீது மேவச் சிறு பதிகம், பன்னும் படி யெனக்குப் பாலிப்பாய்-துன்னக், கடவாரணனே காண்பரிய காரணனே, யிடமாகு முன் மறைத்தாள்.
ஆசிரிய விருத்தம்
வீதிவெளி யாகாச மீதிற் பிரகாசமாய்
மெய்ஞ்ஞான தீபச் சுடராய்
வெளியாகி ஒளியாகி விந்துசுழி முனைமீதில்
விளையாடும் ஓங்காரமாய்
ஓதுமுதலைந்தெழுந்து பதேச மந்திரம்
உரைக்கின்ற சற்குருவுமாய்
உருவாகி உயிராகி உயிருக்குள் அறிவாகி
ஊடாடி நின்ற உணர்வாய்
ஆதிமுத லானவளரன் டபகி ரண்டங்கள்
ஆயிரத் தெட்டுமாகி
அறுநூற்றிருபத்து நாலு புவனங்களும்
ஆண்ட மயமான நிறமாம்
சோதிமய மானபரி பூரணவிலாசமிகு
சூட்சும ரதமே றியே
துலங்குகதிர் மதியென விளங்கு சிவசங்கர
சூரி நாராயண சுவாமியே !
இன்ப சுகமாகவும் பூமியாகாசமும்
ஏகாந்த வைபோகமும்
ஈரேழு பதினான்கு லோகங்களத்தனையும்
இரட்சிக்கும் ஈச்வரனுமாய்
அம்பரதி கம்பர பரம்பர வநாகத
அநாதி யொளியான வெளியாய்
ஆனந்த நடன மிடு முத்தண்டமாகவே
யாடிய சபாபதியுமாய்
வம்பரோடு காலன் எமதூதரணு காமலே
வந்தருள் புரிந்து நிதமும்
வளர்கின்ற கைலாச பரமபத கொடி முடியின்
வரையினை வணங்கி முடிவார்
துன்பமெனு நரகவழி வீழாமல் ரட்சியுஞ்
சோதி ரத மீதேறிய
துலங்கு கதிர்மதியென விளங்கு சிவசங்கர
சூரிய நாராயண சுவாமியே.
உத்ரமிகும் அக்கினி சொரூப வடிவாகிய
ஓங்கார ரூபமாகி
ஒளியாகி வெளியாகி உதயகிரி மீதினில்
உதிக்கின்ற தெய்வமாகிச்
சகல புவனங்களும் தானாகி நின்றவொரு
சச்சிதானந்த மயமாய்ச்
சாலோக சாமீப சாரூப சாயுஜ்ய
சகல சூட்சும தாரியாய்
விக்கிர சிவலிங்க வடிவாக வுமிகுந்த சதுர்
வேதாந்த முத்தி முதலாய்
வெகுகோடி காலங்கள் உன்னையே நம்பினேன்
வேதனே பர நாதனே
சுக்ரகெம் பீரபரி பூரண விலாசனே
சுயம்புரத மீதேறியே
துலங்குகதிர் மதியென விளங்கு சிவசங்கர
சூரி நாராயண சுவாமியே !
சாஸ்திர புராண முதல் வேத வேதாந்தமிகு
சர்வத் தபோதனர்களுஞ்
சகலமான தேவருஞ் சகலமான முனிவர்களுஞ்
சகல சீவன்களுடனே
நேத்திரமதாகவே குறியாகி நெறியாக
நிருமல சொரூபமாகி
நிகழும் சிருஷ்டி திதி சம்மாரவதிகார
நின்ற திரி மூர்த்தியாகி
காத்திரமதாய ஐந்து பஞ்சபூதங்களும்
கருணா கடாட்ச முடனே
கண்டு களிகூர்ந்திடும் விண்ட பரிபூரண
கலைக்கியான வேதமுதலே
சூத்திரந் தாவி விளையாடு மானந்தச்
சுயம்பு ரத மீதேறியே
துலங்குகதிர் மதியென விளங்கு சிவசங்கர
சூரிய நாராயண சுவாமியே.
நிறையான சுக்கிலஞ் சுரோணிதக் கருவூரி
னின்று மொன்றாகவேதான்
நிலையான முக்கோண சக்கரந் தன்னிலே
நிதாகார கமலமீதில்
விரைவான நிலைவீடு மறுகோண மாகியும்
ஆங்கார ஓங்காரமாய்
ஆடிவிளை யாடி நட மாடிய பராபர
அச்சு தானந்த மெனவே
குறையான அன்னையின் கர்ப்பமதில் வாசமுங்
குடியாக முந்நூறு நாட்
கொண்ட ஓர் தாவதனை விண்டுபின் பூமியிற்
குழந்தையாய் வந்து வளரும்
துறையான பாதவழி வீழாமலே செய்ய
சொர்ணரத மீதேறியே
துலங்கு கதிர் மதியென விளங்கு சிவசங்கர
சூரிய நாராயண சுவாமியே.
ரத்தமொடு மாமிசமு மத்தியோடு ரோமமும்
நரம்பு தோலெலும்பு மயிரும்
நாடியொடு சிலேத்துமமும் வாத பித்தங்களும்
நாரும் சீதச வாயுவுடன்
சுத்த பரிசுத்தமொடு ரூபரச கெந்தமமுஞ்
சுக்லாதிதப் பொருளுமாய்ச்
சரணார விந்தமிகு கண்களிரு வகையுமாய்
சார்வையிரு நா பியுடனே
உற்ற கமலந்தனி லுற்ற வுயிரறவே
ஊடாடி நின்ற வுணர்வாய்
ஓங்கார ரீங்கார வாங்கார ரூபமா
யோரெழுத் தாகவே தான்
சுத்த கெம்பீர பரிபூரண விலாசமிகு
சூட்சும ரத மீதேறியே
துலங்கு கதிர் மதியென விளங்கு சிவசங்கர
சூரிய நாராயண சுவாமியே.
நிலையில்லாச் சமுசார வாழ்வை நிஜமென்றெண்ணி
நினைவு தடுமாறாமலும்
நிஜரூபமாகவேகாட்சி தந் தெனையாண்டு
நியமிக்க விது சமயமே
அலையாம லீரேழு பதினான்கு லோகமும்
அணுவுக்கு ளணுவாகியே
அரியர பிரம்மாதி யவதார சிங்கார
அகோர அக்கினி ரூபமாய்
மலையாள கைலாச கிரிகளோடு பரமபதம்
மகமேரு வைகுந்தமும்
வாசமிகு வானதொரு வீதி யாகாயமதில்
வளரும் பிரகாசவொளியே
தொலையாத சளனமதில் முன்செய்த தீவினைத்
துயர்தீர ரத மேறியே
துலங்கு கதிர் மதியென விளங்கு சிவசங்கர
சூரிய நாராயண சுவாமியே.
வழியென்ற துறைகணிலைகள றியாமலே
மனது மிகவே கலங்கி
மாதர்தம் சுகமான வாசைதனை நிசமென்று
மண்ணுலகிலேயலைந்து
பழியென்ற தீவினை யகற்றி விடுமுன் பாதம்
பணியவே யருளுமில்லான்
பாழுமென் மனங்குவிய ஓன்று தரிதம்பனம்
பண்ணுவ துனக்கருமையோ
விதி என்ற கண்ணொளியாகவே நின்றுவிளை
யாடுமணி ரூபமாகி
மேலான செல்வமது தந்தருள் புரிந்திடும்
வேத வேதாந்த முதலே
சுழியென்ற முனை மீதில் ஒங்காரமான அதி
சூட்சுமரத மீதேறியே
துலங்கு கதிர் மதியென விளங்கு சிவசங்கர
சூரிய நாராயண சுவாமியே.
அட்ட திசையெட்டுடன் பதினாறுகோணமும்
அகண்டதொரு கால மீதில்
ஆகாசமீதில் வெகு சோதிப் பிரகாசமாய்
அலங்கார தீபசுடரே
கட்டமதுவான தொரு கவலையினிதீரவுன்
கருணா கடாட்சமுடனே
கனயோக ஞானமது சேவடி கடந்து நீர்
காத்து ரட்சித் தருளவே
இட்டகுல தெய்வம் நீர் எந்தனது உள்ளத்து
இருந்து விளையாடுமவனீ
இன்ப சுகபோகமுஞ் சம்போகமும்
ஏகாந்த வைபோகமு நீ
துட்ட கதி காலமது வென்னை வந்தணுகாது
துணையாக ரத மேறியே
துலங்கு கதிர்மதியென விளங்கு சிவசங்கர
சூரிய நாராயண சுவாமியே.
தங்கமுங்கனக கோபுர விமானமுஞ்
சதுர்வேத மேற் கலசமுத
தளதளென மின்ன வொளியான நவரத்னந்
தரித்த மதி வரிகம்பமும்
அங்கமுறுதாக்கலுறு மனவேகமுங் குதிரை
யாங்கார வோங்காரமா
யைந்தெழுத்தாய் நின்ற மந்த்ர சொரூபமதில்
அருணனே சாரதியுமாய்ச்
சங்கமு மென்னுள்ளே வண்டில் கட்டாணியை
தியானமதனா லிருக்குந்
தினந்தினமு மெந்தனிட சிந்தையி லிருந்தருள
திகம்பரமுமான பொருளே
துங்கபரி பூரண விலாச வொளியாகவே
சுயம்பு ரதமீமேறியே
துலங்கு கதிர் மதியென விளங்கு சிவசங்கர
சூரிய நாராயண சுவாமியே.
நவக்கிரக ஸ்தோத்திரம்
காப்பு-வெண்பா
மண்ணுளுயிர்கட்கனைத்து மாறாதளித்து நல
நண்ணு நவக்ரக நண்பு சொல தண்ணுலவு
திங்களணி தங்குமுயர் செஞ்சடையருண் மகிழ்செய்
கங்கையரு ளைங்கரனார் காப்பு.
சூரியன்
காசினி இருளை நீக்கும் கதிரொளி யாகி எங்கும்
பூசுர உலகோர் போற்றப் பொசிப்புடன் சுகத்தை நல்கும்
வாசியே ழுடைய தேர்மேல் மகாகிரி வலமாய் வந்த
தேசிகா எனைரட் சிப்பாய் செங்கதி ரவனே போற்றி.
சந்திரன்
அலைகடல் அமுதங் தன்னோ டன்றுவந் துதித்து மிக்க
கலைவளர் திங்க ளாகிக் கடவுளோர்க்கு அமுதம் ஈயும்
சிலைநுதல் உமையாள் பாகன் செஞ்சடைப் பிறையாய் மேரு
மலைவல மாக வந்த மதியமே போற்றி போற்றி.
செவ்வாய்
வசனம்நல் தைரி யந்தான் மன்னவர் சபையில் வார்த்தை
புசபல பராக்ர மங்கள் போர்தனில் வெற்றி ஆண்மை
நிசமுடன் அவர வர்க்கு நீள்நிலம் தன்னில் நல்கும்
குசன்நில மகனாம் செவ்வாய் குரைகழல் போற்றி போற்றி.
புதன்
மதனநூல் முதலா உள்ள மறைகளும் கல்வி ஞானம்
விதமுடன் அவர வர்க்கு விஞ்சைகள் அருள்வோன் திங்கள்
சுதன்பவிசு பாக்கி யங்கள் சுகம்பல கொடுக்க வல்லான்
புதன்கவிப் புலவன் சீர்சால் பூங்கழல் போற்றி போற்றி.
பிரகஸ்பதி
மறைமிகு கலைநூல் வல்லோன் வானவர்க் கரசன் மந்திரி
நறைசொரி கற்ப கப்பொன் நாட்டினுக் கதிபனாக்கி
நிறைதனம் சிவிகை மன்றல நீடுபோ கத்தை நல்கும்
இறையவன் குருவி யாழன் இணையடி போற்றி போற்றி.
சுக்கிரன்
மூர்க்காவன் சூரன் வாணன் முதலினோர் குருவாய் வையம்
காக்கவான் மழைபெய் விக்கும் கவிமான் கனகம் ஈவோன்
தீர்க்கவா னவர்கள் போற்றச் செத்தவர் தமை எழுப்பும்
பார்க்கவன் சுக்ராச் சாரி பாதபங் கயமே போற்றி.
சனி
முனிவர்கள் தேவர் ஏனை மூர்த்திகள் முதலானோர்கள்
மனிதர்கள் சகல வாழ்வுன் மகிமை அல்லால்வே றுண்டோ
கனிவுள தெய்வம் நீயே கதிர்சேயே காகம் ஏறும்
சனிபக வானே போற்றி தமியனேற் கருள்செய் வாயே.
ராகு
வாகுசேர் நெடுமால் முன்னம் வானவர்க் கமுதம் ஈய
ஏகிநீ நடுவி ருக்க எழில்சிரம் அற்றுப் பின்னர்
நாகத்தின் உடலோ டுன்றன் நற்சிரம் வாய்க்கப் பெற்ற
ராகுவே போற்றி போற்றி ரட்சிப்பாய் ரட்சிப் பாயே.
கேது
மாதுரு நெடுமால் முன்னம் வானவர்க் கமுதம் ஈயும்
போது நீ நடுவிருக்கப் புகழ்சிரம் அற்றுப் பின்னர்
ஓதுறும் அரச நாகத் துயர்சிரம் ஐந்து பெற்ற
கேதுவே போற்றி போற்றி கீர்த்தியாய் ரட்சிப் பாயே.
பொது
சூரியன் சோமன் செவ்வாய்
சொற்புதன் வியாழம் வெள்ளி
காரிய மிராகு கேது
கடவுள ரொன்பானாமத்
காரியல் சக்கரத்தைத்
தரித்திரர் பூசித்தாலும்
பாரினிற் புத்திரருண்டாம்
பாக்கியம் நல்குந்தானே.
சூரியன்  போற்றி
ஓம் அதிதி புத்ரனே போற்றி
ஓம் அளத்தற்கரியனே போற்றி
ஓம் அறுகுப்பிரியனே போற்றி
ஓம் அருணன் சோதரனே போற்றி
ஓம் அகந்தை அழிப்பவனே போற்றி
ஓம் அக்கினி அதிதேவதையனே போற்றி
ஓம் ஆண் கிரகமே போற்றி
ஓம் ஆதிவார நாதனே போற்றி
ஓம் ஆய்வின் இலக்கே போற்றி
ஓம் ஆறாண்டாள்பவனே போற்றி
ஓம் ஆன்மாவே போற்றி
ஓம் ஆதித்யஹ்ருதய ப்ரியனே போற்றி
ஓம் இருள்நீக்கியே போற்றி
ஓம் இயக்க சக்தியே போற்றி
ஓம் ஈசன் வலக்கண்ணே போற்றி
ஓம் உக்கிரனே போற்றி
ஓம் உஷா நாதனே போற்றி
ஓம் உவமைப் பொருளே போற்றி
ஓம் உயிர்களின் வாழ்வே போற்றி
ஓம் உத்திர நாதனே போற்றி
ஓம் உத்திரட்டாதிபதியே போற்றி
ஓம் என்பானவனே போற்றி
ஓம் எருக்கு சமித்தனே போற்றி
ஓம் எழுபரித் தேரனே போற்றி
ஓம் எண்ணெழுத்து மந்திரனே போற்றி
ஓம் எங்கும் நிறைந்தவனே போற்றி
ஓம் ஏற்றமளிப்பவனே போற்றி
ஓம் ஒளிப்பிழம்பே போற்றி
ஓம் ஓராழித்தேரனே போற்றி
ஓம் ஓய்விலானே போற்றி
ஓம் ஓங்காரத் துதித்தவனே போற்றி
ஓம் கதிரவனே போற்றி
ஓம் கண்கண்ட தெய்வமே போற்றி
ஓம் களங்கமிலானே போற்றி
ஓம் கமலம் விரிப்பவனே போற்றி
ஓம் கர்ணன் தந்தையே போற்றி
ஓம் கனலே போற்றி
ஓம் கண்ணில் காவலே போற்றி
ஓம் கற்பரசிச் சேவகனே போற்றி
ஓம் கண்டியூரில் அருள்பவனே போற்றி
ஓம் காசியபர் மைந்தனே போற்றி
ஓம் காயத்ரி தேவனே போற்றி
ஓம் கார்ப்புச் சுவையனே போற்றி
ஓம் காலக் கணக்கே போற்றி
ஓம் காய்பவனே போற்றி
ஓம் காலைமாலைக் கனிவோனே போற்றி
ஓம் கிழக்கு நோக்கனே போற்றி
ஓம் கிருத்திகை அதிபதியே போற்றி
ஓம் கிரக நாயகனே போற்றி
ஓம் கிருபாகரனே போற்றி
ஓம் குந்திக்கருளியவனே போற்றி
ஓம் குறை தீர்ப்பவனே போற்றி
ஓம் கோதுமைப் பிரியனே போற்றி
ஓம் கோணார்க்கிலருள்பவனே போற்றி
ஓம் ஞாயிறே போற்றி
ஓம் ஞாலக் காவலே போற்றி
ஓம் சனித் தந்தையே போற்றி
ஓம் சங்கராந்தி நாயகனே போற்றி
ஓம் சாட்சித் தேவனே போற்றி
ஓம் சமரிலானே போற்றி
ஓம் சிங்கக் கொடியனே போற்றி
ஓம் சிம்மராசியதிபதியே போற்றி
ஓம் சிரஞ்சீவியே போற்றி
ஓம் சிதம்பரத்தாலயமுளானே போற்றி
ஓம் சுயம்பிரகாசனே போற்றி
ஓம் சூர்ய நமஸ்காரப் பிரியனே போற்றி
ஓம் சூரியனார் ஆலயத் தேவனே போற்றி
ஓம் செம்மேனியனே போற்றி
ஓம் செம்மலர்ப்பிரியனே போற்றி
ஓம் செந்நிறக் குடையனே போற்றி
ஓம் செந்தாமரை ஏந்தியவனே போற்றி
ஓம் சூலாயுதனே போற்றி
ஓம் சோழர் மூதாதையே போற்றி
ஓம் சௌரத் தலைவனே போற்றி
ஓம் தனிக்கோயிலுளானே போற்றி
ஓம் தாமிர உலோகனே போற்றி
ஓம் தூயவனே போற்றி
ஓம் திருமேய்ச்சூரில் அருள்பவனே போற்றி
ஓம் நடுவிருப்போனே போற்றி
ஓம் நன்னிலத்தருள்பவனே போற்றி
ஓம் நலமேயளிப்பவனே போற்றி
ஓம் நளாயினிக்கருளியவனே போற்றி
ஓம் நான்முனித் தந்தையே போற்றி
ஓம் நாடப்படுபவனே போற்றி
ஓம் நீதித் தேவனே போற்றி
ஓம் நோய் தீர்ப்பவனே போற்றி
ஓம் பகற் காரணனே போற்றி
ஓம் பனையபுரத் தருள்பவனே போற்றி
ஓம் பரஞ்சோதியே போற்றி
ஓம் பரிட்சுத்துக்கருளியவனே போற்றி
ஓம் பாலைநிலத் தேவனே போற்றி
ஓம் பிரபாகரனே போற்றி
ஓம் புகழ் வாய்த்தவனே போற்றி
ஓம் புத்தியளிப்பவனே போற்றி
ஓம் மல நாசகனே போற்றி
ஓம் மதி ஒளிரச் செய்பவனே போற்றி
ஓம் மயில் வாகனனே போற்றி
ஓம் மயூரகவிக்கருளியவனே போற்றி
ஓம் முதல் கிரகமே போற்றி
ஓம் முக்கோணக் கோலனே போற்றி
ஓம் முழுமுதற் பொருளே போற்றி
ஓம் மும்மூர்த்தி அம்சமே போற்றி
ஓம் ரவிகுலத் தலைவனே போற்றி
ஓம் ருத்ரன் ப்ரத்யதிதேவதையனே போற்றி
ஓம் விடியச் செய்பவனே போற்றி
ஓம் வலிவலத்தருள்பவனே போற்றி
ஓம் ஹ்ரீம் பீஜ மந்திரனே போற்றி
ஓம் சூரியநாராயணனே போற்றி
ஓம் சூர்யதேவாய நம!
சூரியோதயம் (வீரசோழியம்)
வேலை மடற்றாழை வெண்டோட்டிடைக்கிடந்து
மாலைத் துயின்ற மணிவண்டு  காலைத்
துளிநறவந் தாதெதிரத் தோன்றிற்றே காமர்த்
தெளிநிற வெங்கதிரோன் தேர்.      
(வேறு)
இரவிடை மதியம் என்பான்
நாடிப்போய் மறையும் எல்லை
விரியிருள் எழினி நீக்கி
விசும்பெனும் அரங்கு தன்மேல்
கரைகடல் முழவம் ஆர்ப்பக்
கதிரெனும் கைகள் வட்டித்து
எரிகதிர் என்னும் கூத்தன்
ஆடுவான் எழுந்து போந்தான்.
சூரிய பகவான்
(தண்டியலங்காரம்)
முன்னங் குடைபோல் முடிநாயக மணிபோல்
மன்னுந் திலகம்போல் வாளிரவி  பொன்னகலந்
தங்குங் கவுத்துவம்போ லுந்தித் தடமலர்போல்
அங்கணு லகளந்தார்க் காம்.

சூரிய புராணம் பகுதி-5


சூரிய வழிபாடு: உலகத்தின் உயிராக விளங்கும் சூரியனுடைய வழிபாடு தொன்று தொட்டே இருந்து வருகிறது. வேதங்கள் சூரியனைப் போற்றிக் கொண்டாடுகின்றன. ரிக்வேதம் சூரியனை மூன்றுவித அக்கினிகளில் ஒருவனாக விவரிக்கிறது. யஜுர்வேத ஜோதியை உண்டாக்குபவன் என்றும் சகல லோகங்களையும் ஒளிபெறச் செய்பவன் என்றும் வர்ணிக்கிறது. சாமவேதம் உலகம் முழுவதும் ஒளிபவன் என்று போற்றுகின்றது. அதர்வண வேதம் இருதய நோயையும், காமாலை நோயையும் போக்க சூரியனை ஆராதிக்குமாறு கூறுகின்றது. சூரியன் இன்றேல் உலகில்லை; உயிரில்லை. அவனுடைய சக்தியால்தான் பயிர்கள் வளர்கின்றது. ஜீவ ராசிகள் உயிர் வாழ்கின்றன. உலகுக்கு, உயிருக்கு இன்றியமையாத சூரியனை முழுமுதற் கடவுளாக வழிபட்டுவரும் மதத்துக்கு சவுரமதம் என்று பெயர். இவ்வழிபாடு வட இந்தியாவில் பெரிதும் பரவியிருந்தது. அம்மதத்தினர் சூரியனுக்கு ரத்த அர்க்கியம் கொடுத்து வந்தனர் என்றும் சொல்லப்படுகிறது. ஆதிசங்கரர் அம்மதத்தினரிடையே பரவியிருந்த அவ்வழக்கத்தை நீக்கி ஒழுங்கு செய்தார் என்று சொல்லப்படுகிறது. இவ்வழிபாடு ஆறாம் நுற்றாண்டு முதல் பதிமூன்றாம் நூற்றாண்டு வரையில் பரந்த அளவில் பரவியுள்ளது. ராஜஸ்தானத்திலும், கூர்ஜரத்திலும், காஷ்மீரத்திலும், வங்கத்திலும் இந்தக் காலத்தில் தான் சூரியனுக்குத் தனிக் கோயில் இருந்தது. அதன் பின்னர் இல்லை. அழிந்து விட்டது எனலாம். காலப்போக்கில் கோயில்களும் சிதலமடைந்து மறைந்துபோயின. இப்போது ஒரு சிலவே நமக்குக் காணக் கிடைக்கின்றன. சூரிய வழிபாடு நம் நாட்டிலும் வெளிநாடுகளிலும் பரவியிருந்தது. சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே எகிப்தில் சூரிய உபாசனை இருந்து வந்திருக்கிறது. அந்நாட்டை ஆண்டுவந்த பாரோ எனப்படும் அரசர்கள் தங்களைச் சூரியனுடைய வமிசத்தில் வந்தவர்களாகக் கூறிக் கொள்கின்றனராம். நம் நாட்டைப்போல அவர்களும் பயிர்த்தொழில் பெருகிட சூரியனை அதன் தெய்வமாகக் கொண்டாடினராம்.
பாரஸிகளின் தர்ம கிரந்தமான ஜெந்த் அவெஸ்தானத்திலும் மித்திரனே தெய்வமாகக் கூறப்பட்டுள்ளது. மித்திரன் என்பது சூரியனுடைய பெயர்களுள் ஒன்று. சாம்பன் சூரியனுக்கு கோயில் எடுப்பித்தபோது அவரை ஆராதிக்கத் தகுந்தவர்கள் பாரத நாட்டில் இல்லாத காரணத்தால் சாகத்வீபம் சென்று மாகர்கள் எனப்படும் சூரியனுக்தர்களை அழைத்து வந்தான். மாகர்கள் எனப்படுவோர் இரானியர்கள் அதாவது பாரசீக நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் அபிப்பிராயப்படுகின்றனர். இரானியர்கள் அணிந்து கொள்ளும் புனித இடுப்பு ஆபரணம் சூரியனுக்காக எழுப்பப்பட்ட கோயில்களில் சூரிய விக்கிரகங்களிலும் காணப்படுகிறது. கிரேக்கர்கள் சூரியனை அபொல்லோ என்ற பெயரில் வழிபடுகின்றனர். ரோமர்கள் ஹைபீரியன் என்ற பெயரில் வழிபட்டனர். வட அமெரிக்காவிலுள்ள மெக்ஸிகோவிலும் சூரிய வழிபாடு இருந்ததாகத் தெரிய வருகிறது. இன்றும் இந்நாட்டில் சூரிய வழிபாட்டின் பழமைச் சின்னங்களைக் காணலாம். அவ்விதமே தென் அமெரிக்காவில் உள்ள பெருநாட்டிலுள்ள இன்காஸ் என்ற இனத்தவரும் சூரியனை வழிபட்டு வந்திருக்கின்றனர். ஆதியில் சூரிய உபாசனை மந்திர ரூபமாகவே இருந்து வந்தது. அவருக்கு உருவம் ஏற்பட்டதெல்லாம் பிற்காலத்தில்தான். புராணங்கள் சூரியனுடைய ரூப லக்ஷணத்தைப் பல விதங்களில் வர்ணிக்கின்றன. நாம் அன்றாடம் மூன்று காலங்களில் செய்யவேண்டிய சந்தியாவந்தனத்தில் சூரியன் மிக அழகாக வர்ணிக்கப்பட்டுள்ளது.
சிவாகமங்கள் சூரிய மண்டலத்தின் நடுவே ஈசன் உறைகிறார் என்று கூறுகின்றன. அதனால் அவருக்கு சிவசூரியன் என்ற பெயரும் வழங்கி வருகிறது. சிவனுடைய அஷ்ட மூர்த்தங்களில் சூரியனும் ஒன்று என்றும் சிவனுடைய வலது கண்ணே சூரியனாகத் திகழ்கிறது என்றும் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டிலே நாம் மகர ராசியில் சூரியன் பிரவேசிப்பதைப் பொங்கல் விழாவாகக் கொண்டாடுகிறோம். தை மாதம் முதல் தேதி சூரியன் மகர ராசியில் பிரவேசிக்கிறான். அந்தத் தினத்தை ஸங்கராந்தி எனக் கொண்டாடுகிறோம். கிராமங்களில் புதிதாக அறுவடை செய்து வீட்டுக்குக் கொண்டு வந்த தானியத்தைக் குத்தி அரிசி எடுத்து அதைக் கொண்டு சர்க்கரைப் பொங்கல் செய்து சூரியனுக்கு நிவேதனம் செய்கிறோம் சாபா, ஸுவர்ச்சலா என்ற இரு தேவியருடன் கூடியவராக சூரியனை அன்று பூஜிக்கிறோம். சூரியன் மகர ராசியில் பிரவேசிப்பதிலிருந்து உத்தராயணம் தொடங்குகிறது. உத்தராயண காலம் மிகவும் புண்ணியம் வாய்ந்தது என்பர். சூரியனுடைய கிரணங்களுக்குச் சில நோய்களைப் போக்கும் சக்தி இருப்பதாக விஞ்ஞானிகள் ஆராய்ந்துள்ளனர். ஸன் பாத் எனப்படும் சூரிய ஒளி ஸ்நானம் சிலவகை நோயாளிகளுக்கு விதிக்கப்பட்டுள்ளது. சூரியனை ஆராதிப்பதால் முக்கியமாகக் குஷ்டம் எனப்படும் வியாதியிலிருந்து விடுபடலாம். குஷ்ட சம்பந்தமான நோய்களும் தீர்ந்து விடுகிறது என்றும் சொல்லப்படுகிறது. தினமும் சூரியனைப் பூஜை செய்து வந்தால் ஆரோக்கியமாக இருக்கலாம்.
ஜோதிஷ சாஸ்திரத்தில் சூரியன்: ஜோதிஷ சாஸ்திரம் நவக்கிரகங்களையே ஆதாரமாகக் கொண்டது. முன்னர் ஏழு கிரகங்களே இருந்தனவாம். பின்னர் ராகுவும் கேதுவும் சேர்ந்து ஒன்பது கிரகங்களாயின. சூரியன் சிம்ம ராசிக்கு அதிபதி. அவர் ஜீவகாரகனாகவும், தேககாரனாகவும், பித்ருகாரகனாகவும், நேத்ர காரகனாகவும் விளங்குகிறார். சத்துவ குணமுள்ள அவருடைய மேனி தாமிர வர்ணமுள்ளது. கலிங்க தேசத்தை ஆளும் அவர் கச்யப ÷க்ஷத்திரத்தில் பிறந்தவர். கிழக்கு முகமாக இருப்பவர். அவருக்குப் பிடித்த வர்ணம் சிவப்பு. அவருக்கு அதிதேவதை அக்கினி. பிரத்தியதி தேவதை ருத்திரன். அவர் பூஜிப்பது சிவன். அவருக்கு மிகவும் பிடித்த பத்திரம் அர்க்க பத்திரம். அதாவது எருக்க இலை. அவருக்கு விருப்பமான தானியம் கோதுமை, கனமான உடை அணியும் அவர் உறைவிடம் தேவாயதனம். அவருடைய தன்மை பித்தம். அவருடைய மணி சூரிய காந்தம். அவருடைய பாஷை ஸமஸ்கிருதமும், தெலுங்குமாகும். சுக்கிரன், ராகு, கேது இவர்களுக்குச் சத்துரு, புதனுக்குச் சமமானவர், சனியோடு அவருக்குப் பகை. எல்லா கிரகங்களைவிட சூரியன் பலசாலி என்றாலும் ராகு, கேது இருவருக்கும் சற்று வலிமை குறைந்தவரே. அவருடைய தசாகாலம் ஆறு வருஷங்கள். சித்திரை மாதம் மேஷ ராசியில் அவர் இருக்கும்போது மனிதர்களுக்கு சம்பாத்தியம் குறையும். ஆடி கடக ராசியில் சஞ்சரிக்கும் போது சோம்பல் அவிவேகம் ஏற்படும். ஆவணி சிம்ம ராசியில் சஞ்சரிக்கையில் சாமர்த்தியம், நட்பினால் சுகம் முதலான உண்டாகும். கண்நோய் ஏற்படலாம்.
புரட்டாசி கன்னி ராசியில் இருக்கும்போது செல்வம், அதிகாலை, தெய்வபக்தி முதலான விருத்தியாகும். ஐப்பசி துலா ராசியில் இருக்கையில் புத்தி கூர்மை, தெய்வ ஆராய்ச்சியில் ஈடுபாடு, சாதுவாக இருக்கும் சுபாவம், முதலியன உண்டாகும். கார்த்திகை விருச்சிக ராசியில் அவர் இருக்கும்போது வித்தை அபிவிருத்தி, சாந்தமான சுபாவம், பிறரால் கவுரவிக்கப்படும் தன்மை முதலியன ஏற்படும். மார்கழி தனுர் ராசியில் இருக்கையில் வியாபாரத்தில் வருமானம். பெண்களிடம் மோகம் முதலான ஏற்படும். தைமாதம் மகர ராசியில் இருக்கும்போது பொருள் சம்பாதிப்பதில் சாமார்த்தியம் உண்டாகும். மாசி கும்ப ராசியில் இருக்கும்போது புத்திர பாக்கியம் இல்லாமை, பெற்றோரிடம் துவேஷம், ஆசாரக் குறைவு முதலியன ஏற்படும். பங்குனி மீன ராசியில் இருந்தால் புகழ், தன விருத்தி முதலியன கிட்டும்.
பானோ பாஸ்கர மார்த்தாண்ட
சண்டரச் மே திவாகர
ஆயுராரோக்யம் ஐச்வர்யம்
வித்வாம் தேஹி ச்ரியம் பலம்

சூரிய புராணம் பகுதி-4


சூரிய கோயில்கள் கோணார்க்: வேத காலம் தொட்டு சூரிய வழிபாடு நம் நாட்டில் இருந்து வந்தாலும் ஆறாம் நுற்றாண்டு முதல் தான் வட இந்தியாவில் சூரியனுக்குத் தனிக் கோயில்கள் அமைப்பது ஆரம்பமாயிற்று என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். சாம்பன் சூரியனுக்கு மூன்று இடங்களில் ஆலயம் நிர்மாணித்ததாகச் சொல்லப்படுகிறது. சூரியனுடைய உதயத்தைக் குறிக்க உதயாசலம் என்று ஓரிடத்திலும், உச்சி வேளையைக் குறிக்க மற்றொரு இடத்திலும், அஸ்தமன வேளையை குறிக்க இன்னொரு இடத்திலுமாக மூன்று இடங்களில் கோயில்களை நிர்மாணித்தானாம். அம்மூன்று கோயில்களில் உதயாசலம் என்பது ஓரிஸ்ஸா ராஜ்ஜியத்திலுள்ள புவனேஸ்வரத்துக்கு அருகாமையில் சமுத்திரக்கரைக்கு அருகிலுள்ள கோணார்க் என்ற இடத்திலுள்ள சூரியனுடைய கோயிலே என்று அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள். சந்திரபாகா நதி என்று முற்காலத்தில் அழைக்கப்பட்டு இப்போது ஜீனாப் என்று குறிப்பிடப்படும் ஆற்றின் கரையிலுள்ள மூலஸ்தானம் எனப்படும் மூல்டானில் உள்ள சூரியன் கோயிலே மத்தியான காலத்தைக் குறிக்க அமைக்கப்பட்ட கோயில் என்றும், குஜராத் ராஜ்ஜியத்திலுள்ள மொதேராவிலுள்ள சூரியன் கோயில் அஸ்தமன காலத்தைக் குறிக்க எழுப்பப்பட்டதாகும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.
கோணார்க்கிலுள்ள சூரிய கோயில் பதின்மூன்றாம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. கீழைகங்க வமிசத்தைச் சேர்ந்த முதலாம் நரசிம்மனால் கட்டப்பட்டதாகும். அருகிலே சந்திரபாகா என்ற பெயருடன் சிற்றாறு ஓடுகிறது. அதன் காரணமாகச் சிலர் இதையே சாம்பபுரம் என்றும் சொல்வர். ஆனால் வராக புராணம் கோணார்க் ÷க்ஷத்திரத்தை உதயாசலம் என்றே குறிப்பிடுகிறது. கோயிலைச் சுற்றிலும் சூரியனுக்கான சிலைகள் அதிகம் காணப்படுகின்றன. சூரியன் மும்மூர்த்திகளைக் காட்டும் சிற்பங்கள் விசேஷமானவை. அவற்றில் சூரிய நாராயணரைக் குறிக்கும் சிற்பம் மிகவும் கலையழகுடன் விளங்குகிறது. பத்மத்தின் மீது நின்ற கோலத்தில் சூரியன் காட்சி தருகிறார். தாமரைக்குக் கீழே பக்தர்கள் மண்டியிட்டு வணங்குவது சித்தரிக்கப்பட்டிருக்கிறது. சூரியனுக்கு இருபுறங்களிலும் இரண்டு இரண்டாக நான்கு தேவியர் காணப்படுகின்றனர். பெரிய அளவில் கீழே நின்ற கோலத்தில் இருக்கும் இருவரும் த்யௌ, பிருத்வீ என்றும், மேலே காணப்படும் இருவரும் உஷை, சந்தியா என்றும் சொல்வர். சூரியனுடைய சிற்பத்தில் காணப்படும் நான்கு கைகளில் மேலே உள்ள இரு கைகளில் சக்கரமும் சங்கமும் தாங்கப்பட்டுள்ளன. கீழே உள்ள வலதுகரம் வரதமுத்திரையுடன் காணப்படுகிறது. இடது கரம் அபயஹஸ்தமாக இருக்க வேண்டும். அது உடைந்து காணப்படுகிறது.
மூலஸ்தானம்: சேனாப் நதிக்கரையில் உள்ள மூல்தான் எனப்படும் ஊரே முன்னாளில் சாம்பனால் நிர்மாணிக்கப்பட்ட சாம்பபுரம் என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள். சேனாப் முன்னாளில் சந்திரபாகா என்ற பெயரைக் கொண்டிருந்ததாம். அல்பெரூனி என்பவர் மூலஸ்தானமே சாம்பனால் நிர்மாணிக்கப்பட்ட சாம்பபுரம் என்று குறிப்பிடுகிறார். யுவான் சுவாங் என்ற சீன யாத்திரீகர் மூலஸ்தானத்திலுள்ள சூரியன் கோயிலில் இருந்த தங்கத்தாலான சூரிய உருவத்தைக் குறிப்பிட்டிருக்கிறார். பவிஷ்ய புராணமும் மூலஸ்தானத்தையே சாம்பபுரம் என்று குறிப்பிடுகிறது.
மொதேரா: குஜராத் மாநிலத்தில் பழங்காலத் தலைநகரான பட்டான் எனப்படும் ஊருக்குப் பதினெட்டு மைல் தெற்கே அமைந்திருக்கிறது. மொதோரா. அகமதாபாத்திலிருந்து மேக்ஸனா வழியாக அறுபத்தைந்து மைல் பிரயாணம் செய்தும் இவ்வூரை அடையலாம். இன்று சூரியனுடைய கோயில் மிகவும் சிதில மடைந்துள்ளது. சூரிய விக்கிரகம் வெகு காலத்துக்கு முன்பே கோயிலிலிருந்து அகற்றப்பட்டிருக்கிறது. பதினோறாம் நூற்றாண்டில் இந்த கோயில் குஜராத்தை ஆண்ட ஸோலங்கி வமிசத்தினரால் கட்டப்பட்டதாகும். கி.பி. 1026-க்கும் 1027-க்கும் இடையில் கட்டப்பட்டிருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் அபிப்பிராயப்படுகின்றனர்.
ஸோலங்கி வமிசத்தார் கோயில்களை நிர்மாணிப்பதில் சிறந்தவர்கள். கோயிலின் அமைப்பும் அதன் சிற்பங்களும் போற்றத் தகுந்த வகையில் இருக்கும். மிகவும் சிதிலமடைந்த இந்த நிலையிலும் மொதேரா கோயில் சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்ததாகக் காணப்படுகிறது. கோயில் கிழக்கு நோக்கி அமைக்கப்பட்டிருக்கிறது. சூரியன் உதயமாகும் நேரத்தில் அதன் தகதகவென்ற செந்நிற கிரணங்கள் கோயிலின் வாயிலை நேரிடையாகக் கடந்து கர்ப்பகிருகத்திலே உள்ள சூரியனுடைய சிலைமீது விழுமாம். கோயிலின் முன்பாக உள்ள தடாகம் அழகுற நிர்மாணிக்கப்பட்டதாகும். அதைக் குண்டம் என்று சொல்கிறார்கள். சாம்பன் நிர்மாணித்த மூன்று கோயில்களில் மூன்றாவதான அஸ்தமன காலத்தைக் குறிக்கக்கூடியது இது என்பர். சிற்பங்கள் நிறைந்த தூண்களும் அழகிய மண்டபங்களும் பார்க்கப் பார்க்கப் பரவச மூட்டுபவையாக அமைக்கப்பட்டிருக்கின்றன. இவை தவிர காஷ்மீரத்தில் மார்தாண்ட் என்ற இடத்தில் ஒன்பதாம் நூற்றாண்டில் சூரியனுக்காக ஒரு கோயில் நிர்மாணிக்கப்பட்டிருந்ததாம். கட்ச் பிரதேசத்திலும், வட கூர்ஜரத்திலும் சூரியனுக்குப் பல கோயில்கள் நிர்மாணிக்கப் பட்டிருந்ததாகச் சாசனங்களிலிருந்து தெரிய வருகிறது. இன்னும் ராஜபுதனத்தில் சிரோஹாவிலும், ஜயபூரிலுள்ள காலவ முனிவர் ஆசிரமத்தில் மலை மீதும், வங்காளத்தில் ஆடியால் என்ற இடத்திலும் சூரியனுக்குக் கோயில்கள் இருப்பதாகத் தெரியவருகிறது.
சூரியனார் கோயில்: தமிழ் நாட்டிலே சூரியனுக்குத் தனி கோயிலாக நிர்மாணிக்கப்பட்டிருப்பது சூரியனார் கோவில் என்ற ஒரு தலத்தில்தான். இத்தலம் தஞ்சை மாவட்டத்தில் ஆடுதுறை நிலையத்திலிருந்து இரண்டரை மைல் தூரத்தில் திருமங்கலக்குடி என்ற ஸ்தலத்தை அடுத்து உள்ளது. இந்த கோயில் முதல் குலோத்துங்க சோழனுடைய ஆட்சியின் நாற்பத்து நான்காம் ஆண்டில் கட்டப்பட்டதாகத் தெரிகிறது. முதலாம் குலோத்துங்க சோழனுடைய காலம் கி.பி. 1070 முதல் 1120 வரை என்பர். முதல் குலோத்துங்க சோழன் கல்வெட்டுகள் இரண்டு கோயிலிலே காணப்படுகிறது. அதில் இக்கோயிலிலிருக்கும் சூரிய பகவான், அரசன் பெயராலே குலோத்துங்க சோழ மார்த்தாண்டாலய தேவர் என்று குறிக்கப்பட்டுள்ளார். கர்ப்பக்கிருகத்தில் சூரியன் மேற்கு நோக்கிக் காட்சி தருகிறார். அவருக்கு இருபுறங்களிலும் உஷா தேவியும், பிரத்தியுஷா தேவியும் காணப்படுகின்றனர். நவக்கிரகங்களைப் பிரதிஷ்டை செய்வதற்கு ஒரு விதி முறை உண்டு. சூரியன் நடுவே நிற்க, சந்திரன், புதன், குரு, சுக்கிரன் நால்வரும் நான்கு நேர் திசைகளிலும் அமைந்து செவ்வாய், சனி, ராகு, கேது நான்கு மூர்த்திகளையும் நான்கு மூலைகளிலும் அமைத்து வழிபடுவது சிவாகம முறையாகும். சூரியனார் கோயிலில் இவ்வாறே நவக்கிரகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சூரியனுக்கு எதிரில் கிழக்கு முகமாக குரு இருந்து அவரைப் பூஜை செய்வதாகச் சொல்லப்படுகிறது. காப்ப கிருகத்துக்கு வடக்கில் ராகு கிழக்கு பார்த்தும், சுக்கிரன் தெற்கு முகமாகவும் இருப்பிடம் கொண்டுள்ளார். கோயிலுக்குக் கிழக்குப்புறம் கேது, சந்திரன், செவ்வாய், மூவரும் மேற்கு நோக்கி இடம் கொண்டுள்ளனர். தெற்கில் புதன் கிழக்கு நோக்கியும், சனி வடக்கு நோக்கியும் இருக்கின்றனர். கோயிலில் குதிரையே துவஜஸ்தம்பமாக அமைக்கப்பட்டிருக்கிறது. சுவாமிக்கு சிவசூரிய நாராயணன் என்று பெயர். அவருக்கு அருகே காசிவிஸ்வநாதரும் விசாலாக்ஷியம்மையும் காட்சி தருகின்றனர். இத்தலத்திலே சூரியன் பிரணவ ஸ்வரூபமாகவும் மும்மூர்த்திகளாகவும் விளங்கும் ஈசனை லிங்கமாக ஸ்தாபித்து பூஜை செய்து கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. சோழ அரசன் ராஜேந்திரன் காலத்தில் அலகாத்ரி புத்தூரிலும் எண்ணாயிரம் என்ற கிராமத்திலும் சூரீயனுக்குக் கோயில்கள் இருந்தனவாம்.
சூரியன் பூஜிக்கும் தலங்கள்: சூரியன் பல தலங்களில் இறைவனைப் பூஜித்து அவர் அருள் பெற்றிருக்கிறான். சில தலங்களில் தன் பெயரால் தீர்த்தம் ஏற்படுத்தி இறைவனை அவன் வழிபட்டதாகச் சொல்லப்படுகிறது. அத்தகைய தலங்களின் விபரம் கீழே தரப்பட்டுள்ளன.
திருப்பரிதி நியமம்: தஞ்சாவூருக்குத் தெற்கே ஏழு மைலில் உள்ள தலம் இது. பருதியப் பீசுவரரையும், மங்கள நாயகியையும் சூரியன் வழிபட்ட தலம். இங்குள்ள தீர்த்தம் சூரியதீர்த்தம். சம்பந்தரால் பாடப்பெற்ற தலம்.
மங்களக்குடி: தஞ்சை மாவட்டம் கும்பகோணத்திலிருந்து 14 கி.மீ. தூரத்தில் உள்ள ஆடுதுறை சென்று அங்கிருந்து 3 கி.மீ. தூரம் சென்றால் மங்களக்குடி உள்ளது. காவேரி தீரம். இறைவன் திருநாமம் பிராணவரதேசுவரர். அம்பிகையின் பெயர் மங்களநாயகி. அம்பிகையின் பெயரிலேயே இங்குள்ள தீர்த்தம் மங்கள தீர்த்தம் என விளங்குகிறது. மகாகாளியும் சூரியனும் ஈசனைப் பூஜித்து அருள் பெற்ற தலம் இது. இதன் அருகிலுள்ள சூரியனார் கோயில் செல்பவர்கள் முதலில் இங்குள்ள பிராணநாதேஸ்வரரை வழிபட்டு பின்னர் சூரியனார் செல்ல வேண்டும் எனபது தான் வழக்கம். இத்தலம் அப்பராலும், சம்பந்தராலும் பாடப் பெற்றுள்ளது.
திருநாகேச்வரம்: செங்கல்பட்டு மாவட்டத்தில் குன்றத்தூரில் உள்ள தலம் இது. சேக்கிழார் இவ்வாலயத்தை நிர்மாணித்ததாகக் கூறுவர். இறைவனை மாசி மாதம் 17-ம் தேதியும் 21-ஆம் தேதியும் சூரியன் பூஜிப்பதாகச் சொல்லப்படுகிறது.
பனங்காட்டூர்: தென் ஆற்காடு மாவட்டத்தில் முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு வடகிழக்கே இரண்டு மைலில் உள்ளது. ஸ்தல விருக்ஷம் பனைமரம். பதும தீர்த்தம். சுவாமி பெயர் பனங்காட்டீசர். அம்மன் பெயர் திரிபுராம்பிகை. சம்பந்தரால் பாடப்பெற்ற ஸ்தலம். சூரியன், சிபி ஆகியோர் இறைவனைப் பூஜித்த ஸ்தலம். தை மாதத்தில் மூன்று நாட்களுக்கு சூரியன் இறைவனைப் பூஜிப்பதாகச் சொல்லப்படுகிறது.
கூடலையாற்றூர்: தென் ஆற்காடு மாவட்டத்தில் விருத்தாசலத்துக்குத் தென்கிழக்கே பதினெட்டு மைலில் உள்ளது. இறைவன் பெயர் நெறிகாட்டு நாயகர். அம்மன் பெயர் புரிகுழல் நாயகி. இறைவன் சுந்தரரை இத்தலத்துக்கு அழைத்து வந்து காட்சி தந்த இடம். சித்திரை மாதம் முதல் மூன்று தேதிகளில் சூரியன் ஈசனை வழிபடுவதாகச் சொல்லப்படுகிறது.
கருப்பரியலூர் (மேலைக்காழி)
தஞ்சை மாவட்டத்தில் சிதம்பரத்துக்குத் தெற்கே பதினான்கு மைலில் உள்ள ஸ்தலம். தலைஞாயிறு என்றும் பெயர். சூரிய தீர்த்தமும், இந்திர தீர்த்தமும் விசேஷமாகச் சொல்லப்படுகிறது. சுவாமி பெயர் குற்றம் பொறுத்த நாதர். அம்மன் பெயர் கோல்வளையம்மை. சம்பந்தர் சுந்தரர் இருவரும் இறைவனைப் பாடிய தலம்.
ஆடுதுறை
தஞ்சை மாவட்டத்திலுள்ள இத்தலத்து இறைவன் ஆபத்சகாயரை சூரியன் சித்திரை 6,7,8 ஆகிய மூன்று நாட்களிலும் வழிபடுவதாகச் சொல்லப்படுகிறது. தேவியின் திருநாமம் பவளக்கொடியம்மை. வானர ராஜன் சுக்கிரீவன் பூஜித்ததாலும், காவிரியின் தென் கரையில் இருப்பதாலும் தென்னங்காடுதுரை என்ற பெயரும் உண்டு. அப்பரும், சம்பந்தரும் இறைவனைப் பாடியுள்ளனர்.
திருக்கலய நல்லூர் (சாக்கோட்டை)
கும்பகோணத்துக்குத் தென்கிழக்கே மூன்று மைல் தொலைவில் உள்ளது. இன்று சாக்கோட்டை என அழைக்கப்படும் இவ்வூர் இறைவனை சூரியன் பூஜித்து அருள் பெற்றானாம். சுந்தரரால் பாடப் பெற்ற தலம். பிரளய காலத்தில் கும்பம் வந்து நின்ற இடமாம். இறைவன் திருநாமம் அமிர்தகலையீசுவர். இறைவியின் திருப்பெயர் அமிர்தவல்லி.
திருச்செம்பொன் பள்ளி
தஞ்சை மாவட்டத்தில் மாயூரம் தரங்கம்பாடி ரயில் பிரிவில் செம்பொனார் கோயில் ரயில் நிலையத்துக்கு வடக்கே அரை மைலில் உள்ளது. சித்திரை 7-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை சூரியனுடைய கிரணங்கள் இறைவன் திருமேனியைத் தழுவுகின்றன. அந்நாட்களில் சூரியன் இறைவனை வழிபடுவதாகச் சொல்லப்படுகிறது. அப்பரும் சுந்தரரும் இறைவன் சுவர்ணபுரீசுவரரைப் பாடியுள்ளனர். அம்மன் பெயர் சுகந்தவனநாயகி.
திருப்புந்துருத்தி
தஞ்சைக்கு வடமேற்கே ஏழு மைலில் உள்ள இத்தலத்து இறைவன் புஷ்பவனநாதரை சூரியன் பூஜித்து அருள் பெற்றானாம். சப்தஸ்தான ஸ்தலங்களில் இது ஆறாவது. இறைவியின் நாமம் அழகாலமர்ந்தநாயகி. அப்பர் பாடிய தலம் இது.
திருக்கண்டியூர்
தஞ்சாவூருக்கு வடமேற்கே ஐந்து மைலில் காவேரி தீரத்தில் உள்ளது. அட்டவீரட்டத் தலங்களில் பிரமன் சிரசை ஈசன் துண்டித்த இடம் இது. அப்பரும், சம்பந்தரும் இறைவன் வீரட்டானேசுவரரைப் பாடியுள்ளனர். இறைவியின் திருநாமம் மங்களநாயகி. சப்த ஸ்தான தலங்களில் இது ஐந்தாவது. இத்தலத்தில் சூரியன் மாசி மாதம் 13, 14, 15 தேதிகளில் இறைவனைப் பூஜிக்கிறான்.
திருப்புனவாசல்
அறந்தாங்கியிலிருந்து தென்மேற்கே இருபத்து மூன்று மைலில் உள்ளது. இத்தலத்தில் இருப்பிடம் கொண்டுள்ள இறைவன் திருநாமம் பழம்பதிநாதர், இறைவியின் பெயர் கருணைநாயகி. இத்தலத்தில் சூரியன் குற்றங்கள் எதுவும் தன்னைப் பற்றாதிருக்க இறைவனைப் பூஜித்தானாம். சம்பந்தர், சுந்தரர் இருவராலும் பாடப் பெற்றுள்ள தலம்.
ஸ்ரீவைகுண்டம்
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள இத்தலத்தில், வைகுந்தநாதன் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். நவ திருப்பதிகளில் ஆறாவது இத்தலம். சித்திரை மாதம் 5,6-ம் தேதிகளில் சூரியன் பரந்தாமனை பூஜை செய்து வழிபடுவதாகச் சொல்லப்படுகிறது. அந்த இரு நாட்களிலும் சூரிய கிரணங்கள் இறைவன் திருமேனி மீது நேரிடையாக விழுகின்றனவாம்.
திருக்கோட்டாறு
தஞ்சை மாவட்டத்தில் பேரளம்-காரைக்கால் பிரிவில் அம்பகரத்தூர் ரயில் நிலையத்துக்கு வடகிழக்கே இரண்டு மைலில் உள்ளது. இங்குள்ள தீர்த்தம் சூரிய தீர்த்தம் என்று சொல்லப்படுகிறது. சுவாமி பெயர் ஐராவதேசுவரர். அம்மன் திருநாமம் வண்டார் பூங்குழம்மை. இளையான்குடிமாற நாயனார் அவதாரத் தலம் இது. வெள்ளையானை இறைவனைப் பூஜித்ததால் சுவாமி பெயர் ஐராவதேசுவரர் என்று வழங்கலாயிற்று.
திருமயேந்திரப்பள்ளி (கோயிலடிப்பாளயம்)
கொள்ளிடம் ரயில் நிலையத்திலிருந்து வடகிழக்கே ஏழு மைலில் உள்ளது. இங்குள்ள புஷ்கரணி, மந்திர புஷ்கரணி என்ற பெயர் கொண்டது. சூரியன், இந்திரன், சந்திரன், பிரம்மன் ஆகியோருக்கு ஈசன் தரிசனம் தந்த இடம். இங்கு ஈசன் திருமேனியழகர் என்றும் தேவி வடிவாம்பிகை என்றும் அழைக்கப்படுகின்றனர். சம்பந்தரால் பாடப் பெற்ற தலம்.
திருத்தெற்றியம்பலம்
தஞ்சை மாவட்டத்தில் சீர்காழிக்குக் கிழக்கே ஐந்து மைலில் உள்ள வைஷ்ணவ ஸ்தலம். இங்குள்ள புஷ்கரணியின் பெயர் சூரிய புஷ்கரிணி. ஆதிசேஷனுக்கு பிரத்தியட்சமான ஸ்தலம். சுவாமி செங்கண்மால் என்றும் தேவி செங்கமலவல்லி என்றும் திருநாமம் கொண்டு விளங்குகின்றனர். பகவான் கிழக்கு நோக்கி சயன கோலத்தில் இருக்கிறார்.
திரு வெண்காடு
தஞ்சை மாவட்டத்தில் சீர்காழிக்குக் கிழக்கே ஆறு மைலில் உள்ள இத்தலத்துக்கு சுவேதாரண்யம் என்று வடமொழியில் பெயர். மூவராலும் பாடல் பெற்ற இத்தலத்தில் சுவாமி சுவேதாரணயேகவரர் என்றும் அம்பாள் பிரம்ம வித்தியாநாயகி என்றும் பெயர் கொண்டு விளங்குகிறார்கள். ஸ்தல விருக்ஷம் வடவால விருக்ஷம், இந்திர தீர்த்தம், அக்கினி தீர்த்தம், சூரிய தீர்த்தம் மூன்றும் விசேஷம். மருத்துவாசுரனை சம்கரிக்க ஈசன் அகோர மூர்த்தியாக ரூபம் கொண்ட தலம். கோயிலில் புதனுக்குத் தனி சன்னதி இருக்கிறது. சூரியனால் பூஜிக்கப்பட்ட சூரியேசுவர் கோயில் வெளிப்பிரகாரத்தில் இருக்கிறது. இங்கு நவக்கிரகங்கள் வழக்கமான முறையில் இல்லாது வரிசையாகப் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.
வைத்தீஸ்வரன் கோயில்
தஞ்சை மாவட்டம் சீர்காழிக்கு அடுத்து இருக்கும் தலம். இதற்குப் புள்ளிருக்கும் வேளுர் என்ற பெயரும் உண்டு. கருடன், ரிக்வேதம், வேல், சூரியன் ஆகியோர் இறைவனை இத்தலத்தில் பூஜித்து அருள் பெற்றதால் அப்பெயர் வந்தது. சுவாமி பெயர் வைத்திய நாதேஸ்வரர். அம்பிகையின் பெயர் தையல்நாயகி, இத்தலத்திலும் நவக்கிரகங்கள் ஒரே வரிசையில் நிற்கின்றன.
நீடூர் ஸ்ரீபுரம்
தஞ்சை மாவட்டத்தில் மயூரத்துக்கு அருகே உள்ளது. நீடூர் ரயில் நிலையத்திலிருந்து வடக்கே அரை மைல் தொலைவில் உள்ளது. இத்தலத்திற்கு வகுளாரண்யம் என்ற பெயரும் உண்டு. ஸ்தல விருக்ஷம் மகிழ மரம். இங்குள்ள தீர்த்தத்தின் பெயர் சந்திர தீர்த்தம். இந்திரன், சந்திரன். சூரியன் ஆகியோருக்கு இறைவன் தரிசனம் தந்த இடம். சுந்தரரால் பாடப்பெற்ற தலம் இது. பிரளய காலத்திலும் அழியாத நண்டு இறைவனை இத்தலத்தில் பூஜித்ததாம். ஈசன் திருநாமம் அருட்சோமநாதர். தேவி வேதநாயகி எனத் திருப்பெயர் கொண்டிருக்கிறாள்.
மாந்துறை
தஞ்சை மாவட்டத்தில் ஆடுதுறைக்கு வடகிழக்கே மூன்று மைலில் உள்ள இத்தலத்தில் சூரியன் ஈசனைப் பூஜித்து அனுக்கிரகம் பெற்றாராம். சுவாமி பெயர் மஹேசுவரர். தேவியின் திருநாமம் பார்வதி.
திருநாகேச்வரம்
தஞ்சை மாவட்டத்தில் திருக்குடந்தைக்கு அருகாமையில் உள்ள தலம், திருநாகேச்வரம் ரயில் நிலையத்திலிருந்து முக்கால் மைல் தெற்கே உள்ளது. இத்தலத்துக்கு சண்பகாரண்யம் என்று பெயர். சூரியன், ஆதிசேஷன் ஆகியோர் ஈசனைப் பூஜித்து அருள் பெற்ற தலம். இங்குள்ள தீர்த்தம் சூரியதீர்த்தம் எனப்படும். சேக்கிழாருக்கு மிகவும் அபிமான ஸ்தலம் இது. அவர் தன்னுடைய பிறந்த ஊரான செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள குன்றத்தூரில் இவ்வூர் இறைவனின் நினைவாகவே திருநாகேச்வரம் என்ற கோயிலை எழுப்பியுள்ளார். இறைவன் திருநாமம் சண்பகாரண்யேசுவரர் என்றும் தேவியின் திருநாமம் குன்று முலைநாயகி என்றும் விளங்குகிறது. மூவராலும் பாடல் பெற்ற தலம் இது. இத்தலத்தின் வைஷ்ணவ பகுதிதான் தென் திருவேங்கடம் என்றும், திருவிண்ணகர் என்றும் கொண்டாடப்படும் உப்பிலியப்பன் கோயில் ஆகும்.
கும்பகோணம் கீழ்க்கோட்டம்
திருக்குடந்தை எனப்படும் கும்பகோணத்தில் உள்ள நாகேசுவரர் கோயிலைக் குடந்தைக் கீழ்க் கோட்டம் என்றும், பாஸ்கர ÷க்ஷத்திரம் என்றும் அழைப்பர். இங்கு சூரியன் ஈசனைச் சித்திரை மாதத்தில் 11-ம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு வழிபடுவதாகச் சொல்லப்படுகிறது. அம்மூன்று நாட்களிலும் சூரியனுடைய கிரணங்கள் கோயிலின் வாயிலை நேரிடையாகக் கடந்து கர்ப்பக்கிருகத்திலுள்ள இறைவன் திருஉருவின் மீது நன்குபடும் என்று சொல்லப்படுகிறது. இக்கோயிலில் சூரியனுக்குத் தனிச் சன்னதி இருக்கிறது. ஈசன் நாகேசுவரர் என்றும், இறைவி பெரிய நாயகி என்றும் நாமம் கொண்டுள்ளனர்.
இன்னம்பர்
கும்பகோணத்துக்கு வடமேற்கே நாலரை மைலில் உள்ளது இத்தலம். சூரியன், ஐராவதம், அகஸ்தியர் ஆகியோர் ஈசனைப் பூஜித்ததாகச் சொல்லப்படுகிறது. இங்குள்ள தீர்த்தம் ஐராவத தீர்த்தம் ஆகும். ஈசன் திருநாமம் எழுத்தறி நாதேசுவரர் என்பதாம். இறைவியின் நாமம் கொந்தார் பூங்குழலம்மை. அப்பர், சம்பந்தர் இருவரும் இத்தலத்துக்கு வந்து இறைவனைத் தரிசித்து பாடியுள்ளனர். அரசனுக்கு இறைவனே கணக்காயராக இருந்து கணக்கு ஒப்புவித்தாராம்.
சிவபுரம்
கும்பகோணத்துக்குத் தென் மேற்கே மூன்றரைமைல் தூரத்தில் உள்ளது. இங்குள்ள தீர்த்தம் சூரிய தீர்த்தம் என்று பெயர் கொண்டு விளங்குகிறது. இத்தலத்தில் உள்ள ஈசன் சிவபுரநாதரையும், தேவி சிங்காரவல்லியையும் விஷ்ணு வராக அவதாரமாய் பூசித்தாராம். சம்பந்தரும் அப்பரும் இத்தலத்து இறைவனைப் பாடியுள்ளனர்.
ஆதனூர்
தஞ்சை மாவட்டத்தில் சுவாமிமலை என்ற சுப்பிரமணியர் ஸ்தலத்துக்கு மேற்கே ஒன்றரை மைல் தூரத்தில் உள்ள வைஷ்ணவ ÷க்ஷத்திரம் இது. பிரணவ விமானத்தின் கீழ் பரந்தாமன் ஆண்டளக்குமையன் என்ற திருப்பெயரோடு கிழக்கு நோக்கி சயனம் கொண்டுள்ளார். தேவியின் திருநாமம் ஸ்ரீரங்கநாயகி என்பதாகும். இங்குள்ள புஷ்கரிணி சூரிய புஷ்கரிணி என்ற பெயருடன் விளங்குகிறது. காமதேனு, திருமங்கை ஆழ்வார் ஆகியோருக்கும் பரந்தாமன் பிரத்தியக்ஷம் ஆன தலம்.
திருமீயச்சூர்
தஞ்சை மாவட்டத்தில் பேரளம் ரயில் சந்திப்பிலிருந்து மேற்கே முக்கால் மைலில் உள்ளது. இங்குள்ள புஷ்கரிணி, சூரிய புஷ்கரிணி என்ற பெயருடன் இருக்கிறது. முயற்சி நாதேசுவரர் என்ற திருப்பெயரோடு ஈசனும், சவுந்தர நாயகி என்ற திருநாமத்தோடு தேவியும் திருக்கோலம் கொண்டுள்ளனர். காளியும், சூரியனும் வழிபட்டு அருள் பெற்ற தலம் இது.
திருச்செங்காட்டங்குடி
தஞ்சை மாவட்டத்தில் நன்னிலம் ரயில் நிலையத்திலிருந்து கிழக்கே ஆறு மைலில் உள்ளது. இவ்வூரில் சந்திர தீர்த்தமும் சூரிய தீர்த்தமும் விசேஷம். இத்தலத்துக்குக் கணபதீச்சுரம் என்ற பெயரும் உண்டு. ஈசன் கஜமுகாசுரனை வதைத்ததும் சிறுதொண்டர் சிவன் அடியாராக வந்த இறைவனுக்குப் பிள்ளைக் கறி அமுதிட்டதும் இத்தலத்திலே தான். இறைவன் திருநாமம் கணபதீசுவரர். தேவியின் திருப்பெயர் புழங்குழல் நாயகி. அப்பரும் சம்பந்தரும் இத்தலத்து இறைவனைப் பாடியுள்ளனர்.
நன்னிலம்
இத்தலம் ரயில் நிலையத்திலிருந்து மேற்கே மூன்று மைலில் உள்ளது. மதுவனம் என்ற பெயரும் இத்தலத்துக்கு உண்டு. இங்குள்ள கோயில் சோழராஜன் கோச்செங்கணான் எழுப்பிய மாடக்கோயில்களுள் ஒன்றாகும். சூரியன் பூஜை செய்ததால் இறைவன் பிரகாசநாதர் என்றும் தேவி பிரகாச நாயகி என்றும் அழைக்கப்படுகின்றனர். மதுவனேசுவரரை சுந்தரரும் தரிசித்துப் பாடியுள்ளார். சன்னதியில் தேன் கூடு இருக்கிறது.
நாட்டியத்தான்குடி
தஞ்சை மாவட்டத்தில் திருவாரூர் திருத்துறைப்பூண்டி ரயில் பிரிவில் மாவூர் ரோடு ரயில் நிலையத்திலிருந்து வடமேற்கே முக்கால் மைலில் உள்ளது இத்தலம். இவ்வூரில் காவேரி தீர்த்தமும், சூரிய தீர்த்தமும் விசேஷம். கோட்புலி நாயனார் முத்தி பெற்றது இங்குதான். ஈசன் ரத்தின புரீசுவரர் என்றும், தேவி மலைமங்கையம்மை எனும் திருப்பெயரும் கொண்டுள்ளனர். சம்பந்தரால் பாடப்பெற்ற தலம் இது.
திருநெல்லிக்காவல்
தஞ்சை மாவட்டத்தில் திருவாரூர் திருத்துறைப் பூண்டி ரயில் பிரிவில் உள்ளது. பிரம்மாவும், சூரியனும் ஈசனை வழிபட்ட தலம் இது. பிரம்ம தீர்த்தமும், சூரிய தீர்த்தமும் விசேஷமாகச் சொல்லப்படுகிறது. நெல்லி வனநாதேசுவரர் சம்பந்தரால் பாடப்பெற்றவர். தேவியின் திருநாமம் மங்கள நாயகி. ஐப்பசி மாதம் கிருஷ்ண பக்ஷத்து சதுர்த்தசி முதல் 7 நாட்களும் மாசிமாதம் 18-ம் தேதி முதல் 7 நாட்களும் மாலையில் சூரியன் இறைவனை வழிபடுகிறானாம்.
வலிவலம்
திருநெல்லிக்காவலுக்கு வடகிழக்கே நாலரை மைல் தொலைவில் உள்ளது. இங்குள்ள கோயில் மாடக்கோயில். ஈசன் மனத்துணைநாதர் என்றும் இறைவி வாளையங்கண்ணியம்மை என்றும் பெயர்கொண்டு விளங்குகிறார்கள். சூரியன் பூஜித்து அருள் பெற்ற தலம்.
திருக்கோளிலி
திருநெலிக்காவல் ரயில் நிலையத்திலிருந்து தென் கிழக்கே ஆறு மைலில் உள்ளது. முசுகுந்த சக்கரவர்த்திக்காக இந்திரன் ஏழு நிமிடங்களில் தியாகேசரைப் பிரதிஷ்டித்த சப்தவிடங்கத் தலங்களில் இதுவும் ஒன்று. இவ்வூர் அவனிவிடங்கர் தலமாகும். சுவாமியின் பெயர் கோளிலிநாதர். அம்மன் வண்டார்ப்பூங்குழலம்மை என்ற பெயர் கொண்டிருக்கிறாள். பிரம்மன், திருமால், அகஸ்தியர் முதலானோர் பூஜித்த தலம். இங்கு நவக்கிரகங்கள் ஒரே வரிசையில் அமைந்துள்ளன. மூவராலும் பாடப்பட்ட தலம் இது.
திருவாய்மூர்
திருநெல்லிக்காவலிலிருந்து தென்கிழக்கே எட்டு மைலில் உள்ள இத்தலத்தை அப்பர், சம்பந்தர் இருவருமே பாடியுள்ளனர். இங்குள்ள தீர்த்தம் சூரிய தீர்த்தம். பங்குனி மாதம் 12,13 ஆகிய இரு நாட்களிலும் சூரியன் ஈசனைப் பூஜை செய்கிறானாம். இறைவன் வாய்மூர்நாதர். சுயம்பு லிங்கம். தேவியின் திருநாமம் பாலின் நன்மொழி அம்மை. சப்தவிடங்கத் தலங்களில் இத்தலம் நீலவிடங்கர் தலம் ஆகும். கமலத்தயாகர் நடனம் மிகவும் அற்புதமாம். அப்பரும், சுந்தரரும் வேதாரண்யத்தில் தங்கியிருக்கையில் ஒருநாள் இரவு ஈசன் அப்பருக்குக் காட்சி தந்து அவரைத் தம்முடன் வருமாறு அழைத்துச் சென்று இவ்வூர் கோயிலில் மறைந்து விட்டார். இறைவன் அழைக்க அப்பர் போகிறார் என்பதைக் கேட்டு சம்பந்தரும் பின்னால் ஓடிவர அப்பரின் வேண்டுகோளின்படி சம்பந்தருக்கும் ஈசன் காட்சி தந்த இடம். கோயிலினுள் வேதாரண்யேசுவரருக்கும் சன்னதி இருக்கிறது.
திருத்துறைப்பூண்டி
தஞ்சை மாவட்டத்தில் உள்ள இத்தலத்தை வில்வாராண்ய ÷க்ஷத்திரம் என்றும் அழைப்பர். இறைவன் பிருந்தீஸ்வரரையும், இறைவி பிரகந்நாயகியையும் நவக்கிரகங்கள் வழிபட்டு அருள்பெற்ற தலம்.
குயிலாலந்துறை
தஞ்சை மாவட்டத்தில் மயவரம் தரங்கம்பாடி ரயில் பிரிவில் செம்பொனார் கோயிலுக்கு ஒரு மைல் தொலைவில் உள்ளது. சூரியன் வழிபட்டு அருள் பெற்ற தலம்.
தஞ்சாவூர்
வெண்ணாற்றங்கரையிலுள்ள மாமணிக் கோயில் என்னும் நீலமேகப் பெருமாள் ஆலயத்திலுள்ள பரந்தாமனையும் தேவியையும் சூரியன் வழிபட்டு அருள்பெற்ற இடம். நீலமேகப் பெருமாள் கிழக்கு நோக்கி வீற்றிருக்கிறார். அமிர்த தீர்த்தம், சூரிய தீர்த்தம், கன்னிகா தீர்த்தம் மூன்றும் விசேஷமானது. வேதசுந்தர விமானத்தின் கீழ் யாளி நகரில் கிழக்கு நோக்கி வீற்றிருக்கும் நரசிம்மரையும் சூரியன் வழிபட்டதாகச் சொல்லப்படுகிறது. அவ்வாலயத்தில் சூரிய தீர்த்தம், ராம தீர்த்தம் விசேஷமாம். திருமங்கையாழ்வார் நரசிம்மரையும் தஞ்சை நாயகியையும் தரிசித்துப் பாடியுள்ளார்.
திருவையாறு
தஞ்சைக்கு வடமேற்கே ஆறு மைலில் காவேரி தீரத்தில் அமைந்துள்ள இத்தலத்தின் அருகே ஐந்து ஆறுகள் ஓடுகின்றன. அதன் காரணமாகவே பஞ்சநதேசுவரர் என்றும் ஐயாரப்பர் என்றும் இறைவன் அழைக்கப்படுகிறார். அப்பருக்குக் கைலாயக் காட்சி தந்து அருள் செய்ததால் இத்தலம் தக்ஷிண கைலாசம் என்றும் அழைக்கப்படுகிறது. நந்திதேவர் இத்தலத்தில் இறைவனை ஆராதித்துப் பேறு பெற்றார். சூரிய தீர்த்தம் விசேஷம். சூரியன் ஈசனைப் பூஜித்த இடம். அம்பிகையின் திருநாமம் அறம் வளர்த்த நாயகி. சப்தஸ்தான உற்சவத்தில் தலம் விசேஷமானது. சங்கீத மும்மூர்த்திகளில் முக்கியமான தியாகராஜர் சன்னதி அமைந்துள்ளதலம் இதுவே. அப்பர், சுந்தரர், சம்பந்தரர் ஆகிய மூவரும் இறைவனைத் தரிசித்து பாடியுள்ளார்கள். இந்திரனும் லட்சுமியும் பூஜித்த தலமும் இதுவே என்பர்.
திருச்சோற்றுத் தலம்
தஞ்சைக்கு வடக்கே நான்கு மைல் தொலைவில் காவேரி தீரத்தில் அமைந்துள்ளது. சப்த ஸ்தான ஸ்தலங்களில் இதுவும் ஒன்று. இறைவன் ஒதவனேசுவரர் என்றும் இறைவி அன்னபூரணி என்றும் திருப்பெயர் கொண்டு விளங்குகின்றனர். இந்திரன், சூரியன் ஆகியோர் ஈசனைப் பூஜித்தனர். சூரிய தீர்த்தம் முக்கியம்.
திருக்காட்டுப் பள்ளி
தஞ்சை மாவட்டத்தில் பூதலூருக்கு வடக்கே ஐந்து மைலில் குடமுருட்டி ஆற்றங்கரையில் இருக்கிறது. இதே மாவட்டத்தில் சீர்காழிக்கு அருகே மற்றொரு திருக்காட்டுப்பள்ளி இருப்பதால் இதை மேலைத் திருக்காட்டுப்பள்ளி என்று அழைப்பர். இங்குள்ள தீர்த்தத்தின் பெயர் சூரிய தீர்த்தம். அப்பரும், சம்பந்தரும் பாடிய தலம். சூரியன் பூஜித்ததால் இறைவன் தீயாடியப்பர் என்றும் அழைக்கப்படுகிறார். தேவியின் திருநாமம் வார்கொண்ட முலையம்மை என்பதாம்.
திருவாடானை
இராமநாதபுரம் மாவட்டத்தில் சிவகங்கைக்கு முப்பத்தாறு மைல் தொலைவில் உள்ளது. ஆடு பூஜித்ததால் இறைவனின் பெயர் ஆடானைநாதர் என்று அழைக்கப்பட்டார். தேவியின் திருநாமம் அம்பாயிரவல்லி என்பதாகும். சூரியனும் பிருகும் இறைவனை இத்தலத்தில் வழிபட்டனராம். இங்குள்ள தீர்த்தத்தின் பெயர் சூரிய தீர்த்தம். சம்பந்தரால் பாடல் பெற்ற தலம் இது.
திருப்புல்லாணி
தர்ப்பசயனம் என்றும் அழைக்கப்படும் இந்த ÷க்ஷத்திரம் இராமநாதபுரம் மாவட்டத்தில் இராமநாத புரத்துக்குத் தெற்கே ஐந்து மைலில் உள்ளது. புல்லாரண்ய ரிஷி இங்கு பகவானை ஆராதித்ததால் புல்லாரண்ய ÷க்ஷத்திரம் என்றும் பெயர் பெற்றது. ஸ்ரீராமர் இலங்கை நோக்கி வானர சேனையுடன் புறப்பட்ட போது சமுத்திரத்தைக் கடக்க சமுத்திர ராஜனிடம் அனுமதிபெற அழைத்த இடம். தர்ப்பையைப் பரப்பி அதன் மேல் ஸ்ரீராமன் சயனித்திருந்ததால் தர்ப்பசயனம் என்ற பெயரை அடைந்தது. பகவான் தெய்வச்சிலையார் என்றும் தேவி தெய்வச்சிலை நாச்சியார் என்றும் பெயர் கொண்டுள்ளனர். வைஷ்ணவ ÷க்ஷத்திரம். பகவானுக்குப் பாயசம் நைவேத்தியம் இங்கு விசேஷம். சூரியன் வழிபட்டதால் இங்குள்ள சூரிய தீர்த்தத்தில் ஸ்நானம் மிகவும் முக்கியமாகச் சொல்லப்படுகிறது.
நாகலாபுரம்
சென்னை திருப்பதி பஸ் வழியில் சென்னையிலிருந்து ஐம்பது மைலில் உள்ளது, ஆந்திரமாநிலம் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தது. இந்த ஊருக்கு முன்பு வேத நாராயணபுரம் என்ற பெயர் இருந்ததாம். விஷ்ணு மத்ஸ்யமாக அவதாரம் செய்தபோது பக்தர்களுக்கு அருள்புரிய இத்தலத்தில் மச்சாவதார மூர்த்தியாகத் தங்கி காட்சி தருகிறார். இடுப்புக்குக் கீழே மீனின் உருவம் காட்சி தருகிறதாம். அந்நிலையில் நின்றகோலம் கொண்டுள்ளார். வருடத்தில் மூன்று நாட்கள் சூரியன் பகவானை இத்தலத்தில் வழிபடுவதாகச் சொல்கிறார்கள். முதல் நாள் அன்று சூரியகிரணங்கள் பகவாறனுடைய பாதங்களில் படிந்திருப்பதைக் காணலாம். இரண்டாம் நாள் பகவானுடைய நாபிக் கமலத்தில் சூரிய கிரணங்கள் படிய, மூன்றாம் நாள் அவருடைய திருமுகத்திலே படிந்திருக்கும். கிருஷ்ணதேவராயர் இவ்வாலயத்துக்கு வந்திருந்து திருப்பணிகள் செய்துள்ளார். சூரிய பூஜை செய்வதாகக் கூறப்படும் அந்த மூன்று நாட்களிலும் மக்கள் அக்காட்சியைக் காண சுற்று வட்டாரங்களிலிருந்து வருகிறார்கள்.
நவக்கிரக ÷க்ஷத்திரங்கள்
சூரியனுடைய ÷க்ஷத்திரம் தமிழ் நாட்டிலே சூரியனார் கோயில் ஆகும். அவ்விதமே நவக்கிரகங்களின் மற்ற கிரகங்களுக்கும் தனி ÷க்ஷத்திரங்கள் இருக்கின்றன. அவற்றின் விவரம் இங்கு தரப்பட்டுள்ளது.
சந்திரன் -இந்தளூர்
தஞ்சை மாவட்டத்தில் மாயூரத்துக்கு முந்திய நீடூர் ரயில் நிலையத்திலிருந்து தென்கிழக்கே ஒன்றரை மைலில் உள்ள வைஷ்ணவ தலம். தனக்கேற்பட்ட சாபத்தைப் போக்கிக் கொள்ள சந்திரன் இத்தலத்திலே தன் பெயரில் ஒரு தீர்த்தத்தை உண்டாக்கி அதன் கரையிலிருந்து சுகந்த வனநாதரையும் தேவியையும் வழிபட்டனாம். பரந்தாமனும் சந்திரனுக்குத் தரிசனம் தந்து அவன் சாபத்தைப் போக்கி அருளினாராம். சுகந்தவனநாதர் கிழக்கு நோக்கி அமர்ந்த கோலத்தில் இருக்கிறார். தேவியின் திருநாமம் சந்திரசாபவிமோசனவல்லி என்பதாகும். காவேரியின் கரையிலுள்ள இத்தலத்தில் வியாசருக்கும், வியாக்ரபாதருக்கும் பகவான் தரிசனம் தந்ததாகச் சொல்லப்படுகிறது.
(திருமூலர் நாடிக் கிரந்தப்படி சந்திரன் சுதர்சன திருமலை ÷க்ஷத்திரத்தில் சுதர்சன சக்கராதிபதியான பிரசன்ன வேங்கடேச்வரரைப் பிரதிஷ்டித்து அவர் காலடியிலேயே தன் காயத்திரியை ஸ்தாபித்துக் கொண்டு விளங்குகிறான் என்று சொல்லப்படுகிறது.)
வைத்தீஸ்வரன் கோயில்
தஞ்சை மாவட்டத்தில் உள்ளது. இத்தலத்தை அங்காரக ÷க்ஷத்திரம் என்று கூறுவார்கள் இறைவன் அங்காரகராக நாலாயிரத்து நானூற்று நாற்பத்தெட்டு வியாதிகளைக் தீர்க்கும் மருத்துவராக வேப்ப மரத்தடியில் இருப்பிடம் கொண்ட தலம் இது. ஜடாயுவிற்கு மோக்ஷம் கொடுத்த இடமும் இதுவே எனச் சொல்லப்படுகிறது. கோயில் பிரகாரத்தினுள் ஜடாயு குண்டம் என்று ஒன்று உள்ளது. வைத்தீஸ்வர சுவாமி எத்தனையோ குடும்பங்களுக்குக் குலதெய்வமாக விளங்குகிறார். இத்தலத்தில் தங்கள் குழந்தைகளுக்கு முதல் முடிகொடுக்கும் வழக்கத்தை இப்போதும் கணக்கற்றோர் கடைப்பிடித்து வருகின்றனர். இங்குள்ள சுப்பிரமணியருக்கு முத்துக்குமார சுவாமி என்று பெயர். கிருத்திகை அன்று அபிஷேகம் மிகவும் விமரிசையாக நடத்தப்படுகிறது. அங்காரகன் இத்தலத்தில் இறைவனை வழிபட்டு வருவதாகச் சொல்லப்படுகிறது.
அங்காரகன் தனக்கு ஏற்பட்ட வெண்குஷ்ட நோயைப் போக்கிக்கொள்ள இத்தலத்திலுள்ள சித்தார்த்த தீர்த்தத்தில் நீராடி இறைவனைப் பூஜித்தானாம். அங்காரகனுக்குத் தனி சன்னதி உள்ளது. செவ்வாய்க் கிழமைகளில் தரிசனம் மிகவும் விசேஷமாம். (அங்காரகனை ஆறுமுகனுடைய அவதாரம் என்பர் சிலர். ஆகவே பழனியில் தண்டாயுதபாணியை ஸ்தாபித்து அவர் காலடியில் தன் காயத்திரியைப் பிரதிஷ்டித்து அவரை அங்காரகன் பூஜித்து வருகிறான் என்றும் கூறுவர்.
புதன் -கச்சிநெறிக் காரைகாடு (காஞ்சிபுரம்)
செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள காஞ்சிபுரத்தில் விஷ்ணு காஞ்சி எனப்படும் சின்ன காஞ்சிபுரத்துக்கு அருகே உள்ளது. இறைவன் திருநாமம் சத்திய விரதேசுவரர். தேவியின் நாமம் காமாக்ஷியம்மை. சம்பந்தர் பாடிய தலம். இத்தலத்திலே புதன் இறைவனை வழிபட்டு அருள் பெற்றான்.
(புதனை ஈசுவரனுடைய அம்சமாக சிலர் கூறுவர். அவர்கள் சித்தாந்தப்படி புதன் மதுரையில் ஸ்ரீமீனாக்ஷிசுந்தரேசுவரர் கோயிலில் யந்திர மந்திர ரூபியாய் சாந்நித்தியம் கொண்டிருக்கிறான்.)
பிரகஸ்பதி - காயாரோகணம் (காஞ்சிபுரம்)
செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள காஞ்சிபுரம். காயாரோகணம் என்ற கோயிலில் பிரகஸ்பதி இறைவனை வழிபட்டு இருக்கிறார். திருநெல்வேலி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்துக்கு வடகிழக்கே ஏழு மைலில் உள்ள திருக்குடந்தை பெருங்குளம் என்ற தலத்தில் பிரகஸ்பதி பொலிந்து நின்ற பெருமாளை வழி பட்டதாகவும் கூறப்படுகிறது. நவதிருப்பதிகளில் இத்தலம் எட்டாவதாகும். பிரகஸ்பதி திருச்செந்தூர் ÷க்ஷத்திரத்தில் தம்முடைய யந்திரத்தை ஆறுமுகப் பெருமான் திருவடிகளின் கீழ் ஸ்தாபித்துக் கொண்டு அவரை வழிபடுவதாகவும் சொல்லப்படுகிறது.
சுக்கிரன் - 1, வெள்ளியங்குடி
தஞ்சை மாவட்டத்திலே திருவிடைமருதூருக்கு வடக்கே ஐந்து மைல் தொலைவில் உள்ள வைஷ்ணவ ஸ்தலத்தை வடமொழியில் பார்க்கவபுரி என்றும் அழைப்பர். இங்கே சுக்கிரன் தன் பெயரில் ஒரு தீர்த்தத்தை உண்டாக்கி பரந்தாமன் கோலவில்லி ராமனை வழிபட்டு அருள்பெற்றார். பகவான் கிழக்கு நோக்கி சயனித்துள்ளார். தேவியின் திருநாமம் மரகதவல்லி நாச்சியார். பிரம்மன், இந்திரன், பராசரர் ஆகியோரும் இத்தலத்தில் வழிபட்டுப் பகவானுடைய தரிசனம் பெற்றனராம்.
தாழமங்கை
தஞ்சை மாவட்டத்தில் ஐயம்பேட்டைக்கு அருகிலுள்ள இத்தலத்தில் சுக்கிரன் ஈசனை வழிபட்டாராம். இறைவன் திருநாமம் வெள்ளீசுவரர். தேவியின் திருப்பெயர் வெள்ளை நாயகி. (திருமூலர் நாடிக்கிரந்தப்படி சுக்கிரன் ஸ்ரீரங்க ÷க்ஷத்திரத்தில் ஸ்ரீரங்கநாதருடைய காலடியில் தன் யந்திரத்தை ஸ்தாபித்துக் கொண்டு அவரை வழிபட்டு வருவதாகச் சொல்லப்படுகிறது.)
சனி - திருநள்ளாறு
தஞ்சை மாவட்டத்திலுள்ள பேரளம் காரைக்கால் ரயில் பிரிவில் இத்தலம் அமைந்துள்ளது. அவந்தி நாட்டு அரசன் நளன் சனியால் மிகவும் துன்புறுத்தப்பட்டபோது இத்தலத்துக்கு வந்தது இறைவனைத் தரிசித்து அக்கஷ்டத்தைத் தீர்த்து விட்டுச் சென்றான். நாரதர் உபதேசப்படி அரசன் நளன் சனியால் மக்களோடு இத்தலம் வந்து பிரம்ம தீர்த்தத்தில் நீராடி, மோக்ஷம் அடைந்தான். வந்தவர்களுடைய மேனியிலிருந்து தெரித்த நீர்த்துளிகள் அவர்கள் மீதுப் பட்டதும் அவர்கள் சாபம் காரணமாகப் பெற்றிருந்த யாளி உருவம் நீங்கி மானிட ரூபத்தை அடைந்தனராம். பரத்வாஜரால் இந்த ÷க்ஷத்திரத்தின் மகிமையைச் சொல்லக்கேட்டு அவந்தி நாட்டு மன்னன் உருசிராஜன் இத்தலம் வந்து இறைவனைத் தரிசித்து பேறு பெற்றானாம். காம்பீலி தேசத்து அரசன் தெண்டிகுப்தன் இத்தலத்தில்தான் முக்தி பெற்றான்.
ஆதியில் பிரம்மன் இங்கு இறைவனைப் பூஜை செய்ததால் ஆதிபுரி என்றும், நகவிடங்கர் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பதால் நகவிடங்கபுரி என்றும் பெயர்கள் இத்தலத்துக்கு வழங்கப்படுகின்றன. நளன் வழிபட்டதால் நளேசுவரம் என்ற பெயரும் உண்டு. ஸ்தல விருக்ஷம் தர்ப்பையாதலால் தர்ப்பாரண்யம் என்றும் பெயர் வழங்குகிறது. இத்தலத்திலே சனி பகவானைப் பக்தியுடன் ஆராதிப்பவர்கள் ஏவல், வைப்பு, கிரகதோஷம் ஆகிய துன்பங்களிலிருந்து விடுபட்டு நன்மை அடைகின்றனர். இத்தலத்தில் வாணி தீர்த்தம், அன்ன தீர்த்தம், அகஸ்திய தீர்த்தம், நள தீர்த்தம் ஆகிய தீர்த்தங்கள் இருக்கின்றன. நள தீர்த்தத்தில் நீராடி சனி பகவானைத் தரிசிப்பவர்கள் கிரக பீடைகளிலிருந்து நிவர்த்தியடைகின்றனர். நளகூபம் என்றொரு தீர்த்தம் இருக்கிறது. அதில் யாரும் நீராடுவதில்லை. அதைத் தரிசிப்பதோடு திரும்பி விடுகின்றனர். சப்தவிடங்கத் தலங்களில் ஒன்றான இத்தலத்தை அப்பர், சுந்தரர், சம்பந்தர் மூவரும் பாடியுள்ளனர்.
ராகு - சீர்காழி
தஞ்சை மாவட்டத்திலுள்ள இத்தலத்தில் கடைத் தெருவிலே நாகேசுவரர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் இறைவனை ராகு பூஜித்து வழிபட்டதாகச் சொல்லப்படுகிறது. தேவியின் திருநாமம் பொன்னாம வல்லி என்பதாகும். சம்பந்தரால் பாடப்பெற்ற தலம் இது.
கேது - செம்மங்குடி
சீர்காழிக்கும் வடகிழக்கே இரண்டு மைல் தொலைவில் உள்ளது. இறைவன் பெயர் நாகேசுவரர் என்று கூறப்படுகிறது. இத்தலத்தில் இறைவனை வழிபட்டதாகக் கூறப்படுகிறது.
(கோயம்புத்தூர் மாவட்டத்தில் திருப்பூரிலிருந்து நான்கு மைலில் திருமுருகன் பூண்டியிலும் ஆலயத்தில் கேதுவுக்கும் தனிச் சன்னதி இருக்கிறது. சூரபத்மனைக் கொன்ற பிறகு அத்தோஷம் நீங்க முருகப்பெருமான் இவ்வூரில் இறைவனை வழிபட்டார்.